சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை
மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறையானது திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் RAHAMA நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம் திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக வைத்தியக்கலாநிதி எஸ். சிவதாஸ் (உளநல வைத்திய நிபுணர், போதனாவைத்திசாலை, யாழ்ப்பாணம்) அவர்கள் […]
