Mathuranthaki

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025

2025 ம் ஆண்டுக்கான PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களிற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இயலளவைக் கட்டியெழுப்பும் பயிற்நெறிகளின் முதலாவது பயிற்சி நெறி வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகினால் 03 யூலை 2025 அன்று கனகபுரத்தில் அமைந்துள்ள முகாமைத்துவபயிற்சி அலகின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் Work Family Balance எனும் விடயம் பற்றி வைத்திய கலாநிதி சிவசுதன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இதில் 20 வைத்தியர்கள் இணைந்து […]

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025 Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

2025 PSDG நிதியீட்டத்தின் கீழ் வட மகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அச்சுவேலி மருந்து உற்பத்திப் பிரிவிற்கு புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் தேவைகருதி அவற்றினை பார்வையிடுவதற்காக தியத்தலாவையில் அமைந்துள்ள ஊவா மாகாண ஆயுள்வேத திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவிற்கு எமது மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் 25,26,27 /06/2025 ம் திகதிகளில் சென்றிருந்தனர். அங்கு பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையிட்டதுடன் அவற்றின் பயன்பாடு இயங்கு முறைகள் என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டனர். இதில் அச்சுவேலி

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர். Read More »

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் மேற்கொண்டனர்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் ஆகியோர் இன்று (06.06.2025) நேரில் சென்று பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் மேற்கொண்டனர் Read More »

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு

வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்புடன் 2025.06.03-ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மு.ப. 9.00 மணிக்கு வட பிராந்திய இறைவரித் திணைக்களத்தின் வழிகாட்டுதலில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் (வ.மா) திரு. ந. திருலிங்கநாதன் அவர்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு Read More »

சமூகப் பராமரிப்பு நிலையம் மருதங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது

சமூக சேவைகள் திணைக்களத்தினால் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் PSDG வேலைத் திட்டத்தின் கீழ் ரூபா. 13.374 மில்லியன் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சமூகப் பராமரிப்பு நிலையமானது 2025.02.28ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு பொ. வாகீசன், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடமாகாணம், திரு ந. சுதாகரன், பிரதிப்

சமூகப் பராமரிப்பு நிலையம் மருதங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28.01.2025) இடம்பெற்றது. இதன்போது ஆரிசிய ஆலோசகர் சங்கத்தினரால் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டது. அதில், களப்பணியில் ஈடுபடும் அவர்களுக்கு பொருத்தமான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும், சம்பள மாற்றியமைப்பு மற்றும் சம்பள உயர்வு சரியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீண்டகாலம் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரிய ஆலோசகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும், காகிதாகி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்,

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் பிரிட்டனின் இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

செவ்வாய்க்கிழமை (28.01.2025) யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தைப் பார்வையிட்ட பின்னர் அங்குள்ள கேட்போர்கூடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனும் இதன்போது உடனிருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 28.01.2025        

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் பிரிட்டனின் இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு Read More »

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா 01.01.2025 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ வடமாகாண ஆளுநர் திரு N.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதம செயலாளர் திரு.L.இளங்கோவன், துணைவேந்தர், பேராசிரியர் S.சிறிசற்குணராஜா, கலை, விஞ்ஞானம், இந்து நாகரிக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர் ரகுராமன், பேராசிரியர் ரவிராஜன் பேராசிரியர் பத்மநாதன் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் சார்பில் தொழில்நுட்ப கற்கைகள்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா Read More »

வடக்கு மாகாண ஒளி விழா– 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வட மாகாண ஒளி விழாவானது 2024.12.27 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு வண்ணாங்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லா.நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் முதன்மை விருந்தினர்களாக வடக்கு  மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்

வடக்கு மாகாண ஒளி விழா– 2024 Read More »

சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம்  திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக திரு. J. தற்பரன் (Attorney-at-Law, சிரேஷ்ட உதவிச் செயலாளர், நீதி அமைச்சு) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான

சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு Read More »