Mathuranthaki

பலாலி அம்மன் ஆலயத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வழிபாடு

பலாலியில் மக்கள் வழிபாட்டுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்  புதன் கிழமை (04.12.2024) இடம்பெற்ற வழிபாடுகளில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களும் பங்கேற்றனர். இதன்போது ஆலய நிர்வாகத்தினராலும், ஆலயக் குருக்களாலும் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், கிராம அலுவலர்கள் மற்றும் […]

பலாலி அம்மன் ஆலயத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வழிபாடு Read More »

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும் இடம்பெற்றது

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும், யாழ்ப்பாண பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்துகொண்டனர். தலைமை உரையாற்றிய பிரதேச செயலர் சா.சுதர்சன், வடக்கு மாகாண ஆளுநரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். இலங்கையில் மூன்றாம் மொழியாக சைகை மொழியை அரசாங்க அலுவலர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும் இடம்பெற்றது Read More »

மரியாதை நிமித்தமான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக இன்று செவ்வாய்க்கிழமை (03.12.2024) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இடமாற்றமாகி நாளை புதன்கிழமை (04.12.2024) புறப்படும் நிலையில் மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு Read More »

பலாலி விமான நிலையம் தொடர்பாக அறிவிக்கவேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பலாலி விமான நிலையம் தொடர்பாக அறிவிக்கவேண்டிய தொலைப்பேசி இலக்கங்கள் Read More »

பெற்றோரிய விழிப்புணர்வும் பால்நிலை சார் பிரச்சனைகளும் 2024 பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT)

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால், பொருளாதார நெருக்கடி வாய்ந்த இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்க்கையானது ஓர் சவால் மிக்கதாக உள்ளமையால் பெற்றோர் உடல் உள ரீதியாக மிகவும் சோர்வடைந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை காணப்படுவதுடன் குழந்தை வளர்ப்பு சார்ந்த போதிய அறிவுத்திறன் இல்லாமை, குடும்ப வருமானத்திற்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் உள்ள சிரமம், குழந்தைகளின் மனோநிலையை புரிந்து கொண்டு அவர்களை அனுசரித்து செல்லும் திறன் போன்ற பல வகையான உளப்பிரச்சனைகளை ஒவ்வொரு

பெற்றோரிய விழிப்புணர்வும் பால்நிலை சார் பிரச்சனைகளும் 2024 பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT) Read More »

Pink October மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான நோய்களினால் எமது சமூகம் பாதிப்படைந்து வரும் சூழ்நிலையில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஆனது பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றமை கண்கூடாக நாம் அறிந்ததே! Pink October மாதத்தினை முன்னிட்டு மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை விரைவாக ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் எந்த அளவிற்கு சிறப்பான விளைவுகளைப் பெறமுடியும் என்பவை தொடர்பான பயன்மிகுந்த விழிப்புணர்வு நிகழ்வானது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை, கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார

Pink October மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது Read More »

மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம்

இவ்வாண்டிற்கான 3 ஆம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இக் கூட்டங்கள் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார

மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம் Read More »

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024

மாகாண மட்ட சர்வதேச முதியோர் தின விழாவானது 15.10.2024ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ Hoover மாநாட்டு மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திரு இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி திரு எஸ்.ஸ்ரீசற்குணராசா அவர்களும் கலந்து கொண்டார்கள். இம் முதியோர் தின விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024 Read More »

சர்வதேச சிறுவர் தினவிழா 2024

இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு சிறுவர்தினவிழாவானது மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் 05.10.2024 அன்று இலங்கை வேந்தன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினம் ‘சிறுவர்களை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’ எனும் தொனிப் பொருளைக் கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகின்றது. மாகாணமட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மங்கல விளகோற்றலை அடுத்து சிறுவர்களின் மும்மதப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுனர்

சர்வதேச சிறுவர் தினவிழா 2024 Read More »

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் 03.10.2024 காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது தனியார் போக்குவரத்து சபையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு தனியார் பேரூந்து நிலையம், பஸ் தரிப்பிடங்களில் காணப்படும் வசதி வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அரச போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »