Mathuranthaki

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 18.12.2024

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மன்னார் நகரசபை மண்டபத்தில் ‘கலைத்தவசி’ கலைஞர் (குழந்தை) செ.செபஸ்தியான் அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024 Read More »

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 19.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக எமது பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் கெளரவ விருந்தினராக Varod இயக்குனர், வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி அதிபர் மற்றும் வவுனியா நகரசபை

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது Read More »

மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தின விழாவானது 06.12.2024ம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திருமதி எழிளரசி பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி திரு சு.சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர். மாற்றுவலுவுடையோர் தின விழாவானது மாற்றுவலுவுடைய உற்பத்தியாளர்களின் கண்காட்சி மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது Read More »

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

வவுனியா பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் சில சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் பல்கலைக்கழக துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா தலைமையிலான குழுவினர் இன்று வியாழக்கிழமை (05.12.2024) ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது பல்கலைக்கழ மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கான தங்குமிடம் தொடர்பில் ஆராயப்பட்டது. இவற்றை அமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆளுநருடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடங்களை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு கொடையாளிகளின் உதவியைப் பெற்றுத்தருமாறு

வவுனியா பல்கலைக்கழத்தின் தேவைகள் தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரிடமும் எங்களை விஞ்சிய ஏதாவது திறமை இருக்கின்றது. அது பாராட்டப்படவேண்டியதுடன் இன்னமும் ஊக்குவிக்கப்படவேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட அன்பாகப் பழகக் கூடியவர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று புதன்கிழமை (04.12.2024) ஊரெழு என்.கே. மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய இளையோர் கஷடப்பட்டு வேலை செய்வதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இலகுவாக உழைக்கலாம்

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் Read More »

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் Read More »

திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார்.

திருமறைக்கலாமன்ற தினமும், வைரவிழா ஆண்டின் ஆரம்பமும் கலைத்தூது கலையகத்தில்  செவ்வாய்க்கிழமை மாலை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில், திருமறைக்கலாமன்றத்தின் நிகழ்வுகளை நான் தவறவிடுவதில்லை. திருமறைக்கலாமன்றத்தின் எந்தவொரு நிகழ்வும் தரமானதாகவும் அதன் தனித்துவத்தை பறைசாற்றுவதாகவும் இருக்கும். திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் மறைந்த அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்களின் ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும்தான், இந்த நிறுவனத்தின் எழுச்சிக்கு காரணம். மரியசேவியர் அடிகளார் அவர்களின் நல்ல எண்ணமும், சிந்தனையும்தான் இந்த நிறுவனத்தை இன்று விரிவாக்கி

திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

இச் சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்  புதன் கிழமை  காலை  (04.12.2024) இடம்பெற்றது. கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் ஐ.எல்.ஓ. அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளதாகவும் ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும், ஆளுநருக்கு நன்றி கூறினார். மாவட்டச் செயலராக கடந்த காலங்களில் நான் பணியாற்றியபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனக்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 05.12.2024    

இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் Read More »