December 16, 2025

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்பும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக, மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (16.12.2025) செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 284 பாடசாலை […]

பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட நிகழ்வு புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் உடனடி அவசரப்பொதிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் பால்நிலை சார் வன்முறையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் நலிவுற்ற கர்ப்பிணிகளுக்கு உடனடி அவசரப் பொதிகள் தேவையான நேரத்தில் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் எதிர்வரும் காலப்பகுதிக்கு மாவட்டச் செயலாளர்களின் கோரிக்கைக்கமைவாக கொள்வனவு செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்ட பொதிகள் அமைச்சின்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் உடனடி அவசரப்பொதிகள் வழங்கி வைப்பு Read More »

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பதிவு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனங்களிடமிருந்து பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 4 ஆம் திகதிகளில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து, ‘வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை’ உருவாக்குவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, பதிவு செய்யப்பட்ட

வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை Read More »

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை (20.12.2025) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்துவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்தாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார். இப்பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கு விண்ணப்பித்து, நாளை வரை (16.12.2025) பரீட்சைக்கான அனுமதி அட்டை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை Read More »