October 2025

நாம் இயற்கையை வகைதொகையின்றி அழித்து வருவதால் காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டு போகின்றது. – கௌரவ ஆளுநர்

பாடசாலை மாணவர்களுக்கு இளமையிலேயே இயற்கையை மதித்து – நேசித்து – பாதுகாக்கும் உணர்வை ஊட்டுவதன் ஊடாக எதிர்காலத்தில் இயற்கையை பேணிப்பாதுகாக்கும் சமூகமாக அவர்களை மாற்றும் திட்டத்தை இன்று ஆரம்பித்திருக்கின்றோம். இதைப் பாதுகாத்து எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், […]

நாம் இயற்கையை வகைதொகையின்றி அழித்து வருவதால் காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய சவாலாகிக்கொண்டு போகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநருக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. ரஹமா நிறுவனம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சிறுவர் உரிமை தொடர்பிலும் பணியாற்றி வருகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர் குழுக்களின் தலைவர்களே ஆளுநருடனான சந்திப்பில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனையால் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் சிறுவர்களால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

கௌரவ ஆளுநருக்கும், ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்பட்ட சிறுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. Read More »

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் சர்வதேச விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயகவுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பிரதியிடப்பட்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, வடக்கு மாகாண ஆளுநரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக, போர்க்கால சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் மற்றும் முறையான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தாமல், நாட்டை

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 29 செப்டெம்பர் 2025 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன்; அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

ஆளுநர் செயலகத்தில் நவராத்திரி விழா

நவராத்திரி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. ஆளுநர் செயலகப் பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.    

ஆளுநர் செயலகத்தில் நவராத்திரி விழா Read More »

மகளிர் விவகார அமைச்சின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.10.2025) நடைபெற்றது. மகளிர் விவகார அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை

மகளிர் விவகார அமைச்சின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

கௌரவ ஆளுநருக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30.09.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தால் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. ‘பாடசாலை மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீதம் குறைவடைந்து வருகின்றது. விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளைக்கூட பெற்றோர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையில் மாத்திரமே பங்கேற்கவே அனுமதிக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை முடிந்ததும் தனியார்

கௌரவ ஆளுநருக்கும், உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »