விவசாய அமைச்சு

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா

ஓமந்தையிலுள்ள காயாங்குளம் எனும் இடத்தில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா 01.10.2019 ஆம் திகதியன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறிய வெங்காயச் செய்கை பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய வெங்காயச் செய்கையானது ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்தளவிலான விஷ்தீரணத்திலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே பெரிய வெங்காயச் செய்கைத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்தும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தன் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெரியவெங்காயவிதை வழங்கப்பட்டு, விவசாயப் போதனாசிரியர்களின் ஆலோசனைகளின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது […]

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பான வயல் விழா Read More »

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப்பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்குத்

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள் பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும்

யாழ்ப்பாணம் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் “காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி

விவசாயக் கண்காட்சி 2019 – யாழ்ப்பாணத்தில் 17 செப்ரெம்பர் தொடக்கம் 20 செப்ரெம்பர் வரை நடைபெறும் Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாத்தீனியம் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா விவசாயக் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக கடந்த 10.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இதன்போது பொறுப்பான பாத்தீனியம் உத்தியோகத்தரின் வழிகாட்டலின் கீழ் விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மேற்படி பாத்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு உளுக்குளம் விவசாயபோதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதி அன்று தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. இதன் போது தேனீ குடித்தொகையை பேணுதல், பிரித்தல், பீடைத் தகக்கங்களிலிருந்து பாதுகாத்தல் போன்றன தொடர்பான செயன்முறை விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தேனீ வளர்பானது வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் மிகக் குறைந்தளவிலான முயற்சியாளர்களே மேற்படி தேனீவளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் மேலும் முயற்சியாளர்களை

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி Read More »

“மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா”

“TOM E JC மாமரங்களின் விளைச்சலை அதிகரித்தல்” எனும் நோக்கில் “மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா” 09.08.2019 ஆம் திகதி  அன்று அடம்பன் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள இத்திக்கண்டல் எனும் கிராமத்தில் அடம்பன் விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூறு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இவ் வயல் விழாவில் பாடவிதான உத்தியோகத்தர் (பழப்பயிர்கள்), உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என

“மாமரங்களைக் கத்தரித்தலும் பயிற்றுவித்தலும் தொடர்பான வயல்விழா” Read More »

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும்

வடமாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலிற்கமைய வடமாகாண ஆளுநர் செயலக அலுவலர்கள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, வட்டக்கச்சி, இரணைமடு போன்ற பிரதேசங்களுக்கு 20.07.2019 ஆம் திகதி களவிஜயமும் கல்விச் சுற்றுலாவினையும் மேற்கொண்டிருந்தார்கள். இக் களவிஜயத்தில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேக செயலளர், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள், ஆளுநரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உதவி விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் என

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வடமாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களின் கள விஜயமும் கல்விச் சுற்றுலாவும் Read More »

தேசிய போதையற்ற வாரம் தொடர்பிலான கலந்தரையாடல்

தேசிய போதையற்ற வாரத்தினை முன்னிட்டு ”போதையற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் கடந்த 25.06.2019 ஆம் திகதியன்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலானது கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டாக்டர். சி.வசீகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தேசிய போதையற்ற வாரம் தொடர்பிலான கலந்தரையாடல் Read More »

வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

மாவட்ட மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் 31.05.2019 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இக் கௌரவிப்பு நிகழ்வானது உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. சூ.ஜெகதீஸ்வரி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம்

வவுனியா மாவட்ட சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் 14.05.2019 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »