விவசாய அமைச்சு

விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம்

வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தலைமையிலான குழுவினர் விவசாய நவீன மயமாக்கல் திட்ட அனுசரணையுடன் வவுனியா சன்னாசிப்பரந்தனில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தோட்டங்களை 24.07.2020 அன்றுபார்வையிட்டனர். இப்பிரதேசத்தில் பப்பாசிச் செய்கையானது வைரசு நோய்த்தாக்கத்தின் காரணமாக அண்மைக் காலத்தில் கைவிடப்பட்டது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளிற்கு தலா 320 ரெட்லேடி இன பப்பாசிக் கன்றுகள், 40 நாகபூச்சிடப்பட்ட இரும்பு குழாய்கள்(GI Pipe), 180 m நீளம் 3 m அகலமுடைய பூச்சி உட்புகாவலை […]

விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம் Read More »

கொய்யாகாயினை ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யும் முல்லைத்தீவு விவசாயி

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கொய்யா செய்கை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் 2016 ஆம் ஆண்டு கொய்யாச் செய்கைக்காக Bangkok Giant என்ற கொய்யா இனக்கன்றுகள் விவசாயிகளிற்கு செய்கைக்காக வழங்கப்பட்டது. பழம்பாசியினைச் சேர்ந்த சின்னத்தம்பி பிரபாகர் என்ற விவசாயி விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட நாற்றுக்களுடன் தானும் மேலதிகமாக கொள்வனவு செய்து மொத்தமாக 1500 நாற்றுக்களை நாட்டி பராமரித்து வருகின்றார். மிகச்சிறப்பான முறையில் செய்கையினை மேற்கொண்ட இவ் விவசாயி 2019

கொய்யாகாயினை ஐரோப்பிய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யும் முல்லைத்தீவு விவசாயி Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ்; நிலக்கடலை விதை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன்; விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளீடுகளாக ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20Kg ஜம்போ நிலக்கடலை விதை, 25Kg ஜிப்ஸம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன விநியோகிக்கப்பட்டு பயிர் தற்போது அறுவடை நிலையில் காணப்படுகின்றது. மேற்படி நிலக்கடலைப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு பயனுடையதாக

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா Read More »

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம்

மாகாண விவசாயத் திணைக்களத்தால் உலகவங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கொடித் தோடைச் செய்கைக்கான 100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீடுகள் விநியோக நிகழ்வு 12.05.2020 அன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் திரு.க.பத்மநாதன் அவர்கள் தனது

விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டம், 2020 கீழ் கொடித்தோடைக் கன்றுகள் விநியோகம் Read More »

நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) கீழ் 70 ஏக்கர் விஸ்தீரணத்திற்கான நிலக்கடலை விநியோக நிகழ்வு 14.05.2020 ஆம் திகதி ஒட்டிசுட்டான் இளைஞர் விவசாயக் கழகத்தில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.சி.சுரேன் அவர்களின் தலைமையில் மு.ப.11.00மணிக்கு இடம்பெற்றது. யாலா 2020 காலத்திற்க்கு 80 பயனாளிகளிடையே 70 ஏக்கருக்கு 2800 கிலோ நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வின் போது 5 கிராஅலுவலர் பிரிவுகளில்

நிலக்கடலை விநியோகமும் சமூக மட்ட அமைப்புக்களின் உருவாக்கமும் Read More »

வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவுகையினால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்வது பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உணவப் பற்றாக்குறை ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுவதனால் அதனை எதிர்கொள்ளும் நோக்கில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்; “CRIWMP” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தில் உலுக்குளம், செட்டிக்குளம், கோவில்குளம், பம்பைமடு மற்றும் மடுக்கந்த விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நெல் மற்றும் மறு வயற்பயிர்களிற்கான விதை உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சிறுபோகம்,

வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி Read More »

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி

தேன் உற்பத்திக்காகதேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் எனும் பயிற்சி நெறியானது வட்டக்கச்சியிலுள்ள மாவட்டவிவசாயப் பயிற்சிநிலையத்தில் 26.02.2020 ஆம் திகதி நடைபெற்றது. இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகை நிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் திருமதி.லோட்டாகிறிஸ்ரியன்சன் அவர்களும் கலந்துகொண்டனர். மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் இப் பயிற்சிநெறியில் பங்குபற்றிப் பயனடைந்தனர் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் இப் பயிற்சிநெறியினை ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சிநெறியில்

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி Read More »

விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொல்லவிளாங்குளம் எனும் கிராமத்தில் வ.பிறேமச்சந்திரன், அ.தர்மகுலசிங்கம் ஆகிய இரு விவசாயிகள் கூட்டாக இணைந்து 2 ஏக்கரில் நாற்று நடுகை மூலம் விதை உற்பத்தி மேற்கொண்ட வயலில் விவசாயப் போதனாசிரியர் கி.கீர்த்திகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் 07.02.2020 வயல் விழா நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர்

விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா Read More »

மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளல் அவசியம். அந்த வகையில் வடமாகாண விவசாயத்திணைக்களமானது பாரம்பரிய மற்றும் போசணைமிகு உணவுகளை சுகாதாரமான முறையில் பொதுமக்களிற்கு வழங்கும் நோக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ”அம்மாச்சி ” எனும் உணவகங்ளை ஆரம்பித்து வைத்து சிறப்பான சேவையை மக்களிற்கு ஆற்றிவருகின்றது. அந்த வகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி நகர் பகுதியில் புதிய அம்மாச்சி உணவகம் 02 ஜனவரி 2020 அன்று சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது Read More »