விவசாய அமைச்சு

கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்று நடுகை நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இளம் விவசாயிகள் கழகத்திற்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் வழங்கப்பட்ட நெல் நாற்று நடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்முறை ரீதியான முன்மாதிரி (Method Demonstration) நிகழ்வானது 20.04.2021 அன்று காலை 10.00 மணியளவில் கரியாலை நாகபடுவான் இடதுகரை கமக்காரர் பிரிவில் 12ம் வாய்க்கால் பகுதியில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன் மாதிரி விவசாயிகளான திரு. செ. திருச்செல்வம், திரு. சி. ஜெயக்குமாரசிங்கம் ஆகியோரின் வயலில் […]

கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்று நடுகை நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்ன வெங்காய உண்மை விதை அறுவடை விழா

தேசிய விஞ்ஞான கழகத்தின் நிதி அனுசரனையில் உண்மை விதை உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை துல்லியமாக உய்த்தறிவதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழப்பாண மாவட்டங்களில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்திக்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்யும் நோக்குடனும் அதன் பேண்தகு தன்மையினை உறுதிப்படுத்து முகமாகவும் போட்டி ஆராய்ச்சி கொடுப்பனவிற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளரும், கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் பேறாக 05/04/2021 ஆந்

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்ன வெங்காய உண்மை விதை அறுவடை விழா Read More »

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா 31.03.2021 அன்று சண்டிலிப்பாய் விவசாய போதனாசிரியர் பரிவில் பிரான்பற்று கிராமத்தில் நடைபெற்றது. இவ் வயல் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய பணிப்பாளர் திரு. சி. சிவகுமார், சிறப்பு விருந்தினராக பொறுப்பதிகாரி ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி திருமதி. பா.பாலகௌரி, யாழ். மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ. ஸ்ரீரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி) திரு.எஸ். ராஜேஷ்கண்ணா, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.குலோத்துங்கன், விவசாயத் திணைக்கள

வேதாள வெங்காய உண்மை விதையுற்பத்தி வயல் விழா Read More »

விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் பேண்தகு விவசாயம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது 06.03.2021 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், சிறப்பு விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் திருமதி.ஆ.லதுமீரா, துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் திரு.எ.அமுதலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.பு.சிவபாலன், சித்த ஆயள்வேத வைத்தியர் திருமதி எஸ்.சிவராஜன், மல்லாவி

விவசாயிகள் பயிற்சி நிலைய வயல் விழா – மல்லாவி Read More »

சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவதற்கு ஏதுவாக விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையம், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 04.03.2021 ஆம் திகதி உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.க.மு.அ.சுகூர் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் வட மாகான விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும்

சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு Read More »

மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி

மாகாண விவசாயத்தினணக்களத்தின் ஏற்பாட்டில் 23.02.2021 செவ்வாய் கிழமை மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு யாழ்ப்பாண மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி வகுப்பிற்கு மாத்தளை மாவட்ட ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் விரிவாக்க உத்தியோகத்தர் திரு.எம்.ஏ.எம்.இல்மி வளவாளராக கலந்துகொண்டார். இப் பயிற்சி வகுப்பில் மஞ்சள், இஞ்சி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் யாழ்ப்பாண பிரதி மாகாண விவசாய பணிமனையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியானது

மஞ்சள், இஞ்சி பயிர்ச்செய்கை மற்றும் அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம் தொடர்பான பயிற்சி Read More »

வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் உடுவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 09.02.2021 ஆம் திகதி  நடை பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மருதனார்மட விவசாயக்கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். விதையிடும் கருவியை பயன்படுத்தி நெல்லை வரிசையில் விதைத்து பயிர்செய்கை மேற்கொள்வதன்

வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா Read More »

நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம்

வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் கலாநிதி. ஜயந்த அவர்களும் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை 03.01.2021 ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர். இக்கள விஜயத்தில் சேனாநாயக்க உதவி விவசாய பணிப்பாளர் கலாநிதி ரீ.கே. இலங்ககோன், மண் விசேடத்துநர் கலாநிதி. டபிள்யூ.எம்.யூ.கே ரட்னாயக்க, இனவிருத்தி விசேடத்துநர் கலாநிதி பாகிம், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் சி.சிவநேசன் மற்றும் மாகாண விவசாயபணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட பிரதி

நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம் Read More »

உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம்

கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக. விவசாயத் திணைக்களத்துடன் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனம் இணைந்து உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மிளகாய் செய்கையின் மூலம் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிக்கும் செயல் திட்டத்தினை வட

உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம் Read More »

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது Read More »