உவர் நிலத்தில் நெற்செய்கை மற்றும் நெல் அறுவடையின் பின்னரான மறுவயற்பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிச்செய்கை தொடர்பான களவிஜயம்
ஆளுநர், வடமாகாணம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 24.07.2020 ஆம் திகதி சீனா நாட்டு சர்வதேச புகையிரத கூட்டுறவு நிறுவனத்தின் (Railway International Group CO, Ltd) இலங்கைக்கான பிரதிநிதிகளான எந்திரி வெபர் சியா மற்றும் திரு.ஹாயோ பெங் ஆகியோருடன் யாழ் மாவட்டத்திற்கான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி.வி.நடனமலர் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் திரு.ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவானது நவாலி தெற்கு, அராலி, வட்டுக்கோட்டை சங்கானை, சங்குவேலி வயல்வெளிகளில் பயிர்செய்கை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக […]
