விவசாய அமைச்சு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் வயல்விழாவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 23.05.2019 ஆம் திகதி  ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் இ.கோகுலதாசன், கால்நடை உற்பத்தி […]

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019

“காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்’’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சியானது உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 09.05.2019 தொடக்கம் 11.05.2019 வரையான மூன்று நாட்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019 Read More »

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் 11.05.2019 ஆம் திகதி சனிக் கிழமை உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்

சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018 Read More »

நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை

யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 10.04.2019 (புதன்கிழமை) அன்று காலை 7.30 மணி முதல் 11.30 மணிவரை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நடமாடும் சேவையில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்களின் ஆதரவுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் நடாத்தப்பட்டது. இப் பயிர்ச் சிகிச்சை முகாமில் நோய்

நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை Read More »

புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் யாழ்ப்பாணம்

திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பல்வேறு புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா 09.04.2019ம் திகதி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மாகாண நன்னீர் மீன் வளர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் பி.முகுந்தன், மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சாந்தசீலன் அவர்களும், மாகாண விவசாயத் திணைக்கள

புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் யாழ்ப்பாணம் Read More »

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் அரச விதை உற்பத்திப்பண்ணை, 05 மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் அச்சுவேலி பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்தலையும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும்

நடமாடும் விற்பனை மூலம் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

சூரிய மின்சக்தி நீர்ப்பாசனத்தின் கீழ் வெற்றிகரமான பயிர்ச்செய்கை சம்பந்தமான வயல்விழா

தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாகாண விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சூரிய சக்தியின் உதவியுடன் இயங்கும் நீர்ப்பாசனத் தொகுதியினைப் பயன்படுத்தி குறைந்த உற்பத்திச் செலவுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைக்கான வயல்விழா 04.04.2019 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் வற்றாப்பளையிலுள்ள எஸ்.ஈஸ்வரன் எனும் விவசாயியின் தோட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும்,

சூரிய மின்சக்தி நீர்ப்பாசனத்தின் கீழ் வெற்றிகரமான பயிர்ச்செய்கை சம்பந்தமான வயல்விழா Read More »

சேதனச் செய்கை தொடர்பான வயல்விழா

சேதன விவசாயச் செய்கை தொடர்பான வயல் விழாவானது உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிழன் அவர்களின் தலைமையில் உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த திருமதி.தே.இரஞ்சிதராணி அவர்களின் வயலில் 22 மார்ச் 2019 அன்று நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.செ.ஜே.அரசகேசரி, கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.அ.செல்வராஜா, சென்றூப் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ச.சண்முகசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட பிரதி

சேதனச் செய்கை தொடர்பான வயல்விழா Read More »

நடமாடும் விற்பனை சேவை

யாழ்ப்பாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் மருதனார்மடம் பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத் தோட்டச்செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 26.03.2019 யாழ் .மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள் மற்றும் அலுவலகத் தோட்டங்கள் என்பவற்றை அமைப்பதற்கும் அவற்றினை மேம்படுத்துவதற்கும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் அச்சுவேலியில் அமைந்துள்ள பூங்கனியியல் கரு மூலவள நிலையம்

நடமாடும் விற்பனை சேவை Read More »

நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா

விளைவு அதிகரிப்பை மேம்படுத்துவோம் எனும் நோக்கில் நாற்று நடுகை கருவி மூலம் நடுகை செய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா 20.3.2019 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வண்ணாகுளம் மற்றும் குமனாயன்குளம் ஆகிய நெல் வயல்களில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூர் அவர்களின் ஏற்பாட்டில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் திருமதி.ளு.து.இமல்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும்,

நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா Read More »