பிரதம செயலாளர் அலுவலகம்

வடமாகாண சபை ஒளிவிழா – 2022

வடமாகாண சபை ஒளிவிழா-2022 நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் 27.12.2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவாபோல் அவர்களும் மற்றும் கல்வாரி ஆலய பிரதம போதகர் விக்ரம் அவர்களும் கலந்துகொண்டதுடன் பிரதிப் பிரதம செயலக செயலாளர்கள், […]

வடமாகாண சபை ஒளிவிழா – 2022 Read More »

வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு

வடமாகாண சபை வளாகத்தின் பிரதம செயலாளர் செயலகத்திற்கான மரநடுகை நிகழ்வானது வடமாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் 13.12.2022 மற்றும் 14.12.2022 ஆகிய தினங்களில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மர நடுகையை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உதவிப் பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர்,பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் மரநடுகையை மேற்கொண்டனர். இம் மரநடுகை நிகழ்வில் புங்கை மரங்கள், தேக்கு, மா, பலா

வடமாகாண சபை வளாகத்தின் மரநடுகை நிகழ்வு Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் மும்மொழி கற்றல் நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 19.12.2022 அன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம செயலாளர்-வடக்கு மாகாணம் அவர்களும், செயலாளர் கல்வி அமைச்சு-வடக்கு மாகாணம் அவர்களும் சிரேஸ்ட உதவிச் செயலாளர்-கல்வி அமைச்சு, பிரதம கணக்காளர்-கல்வி அமைச்சு, உதவிச் செயலாளர்-இளைஞர் விவகார

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Read More »

தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருதுகள் வழங்கும் விழா-2020

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருதுகள்-2020 வழங்கும் நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அவர்களின் தலைமையில்  27.10.2022 அன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட திறன்கள் அபிவிருத்தி நிலையத்தில் மு.ப 10.00 மணிக்கு விருந்தினர்களின் வருகையுடன் ஆரம்பமாகியது. இவ்விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், தேசிய உற்பத்தித்திறன்

தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்கான விருதுகள் வழங்கும் விழா-2020 Read More »

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறப்பு விழா

கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவு மற்றும் மருந்து விற்பனை நிலையத் திறப்பு விழாவானது வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தினால் 28.10.2022ம் அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி நிலையம் பிரதம செயலாளர் – வடக்கு மாகாணம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ,ந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், செயலாளர் சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம், மாகாண ஆணையாளர்

சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறப்பு விழா Read More »

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 ஆம் திகதி காலை 10 மணிக்கு A9 வீதி, கைதடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின்

2022ம் ஆண்டின் இரண்டாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 19.10.2022 Read More »

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021

வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாண வலயத்துக்குரிய மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 10.10.2022 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களும் ஏனைய அதிதிகளாக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப்

யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021 Read More »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழாவும் மற்றும் றோட்டறிக் கழகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்துக்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் 10.10.2022 அன்று திங்கட்கிழமை ஆதார வைத்தியசாலை வைத்தியர் அத்தியட்சகர் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.பந்துலசேன அவர்களும் ஏனைய அதிதிகளாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், தென்மராட்சி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் Read More »

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவையானது 28.09.2022 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நடமாடும் சேவையானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதல்களுடன், சம்பத்நுவர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்  தனித்துவமான 10 இடங்களில் இடம் பெற்றது. இந்நடமாடும் சேவையில் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான

சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை Read More »

KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு

கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யுனிசெப்பினால் அமுல்ப்படுத்தப்படும் KOICA – UNICEF நிகழ்ச்சித் திட்டமானது ரூபா 270 மில்லியன் ஒதுக்கீட்டில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டலின்கீழ் 27 அவசியமான கருத்திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட பாடசாலை கட்டடங்களின் கையளிப்பு நிகழ்வு 26.07.2022 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில்

KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு Read More »