ஆளுநர்

Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்கலந்து சிறப்பித்தார்.

இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள One Galle Face சிறப்பு அங்காடி தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி கூடத்தை, ஏனைய அதிதிகளுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் […]

Women Plus Bazaar 2024 கண்காட்சியின் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்கலந்து சிறப்பித்தார். Read More »

தாவர தனிமைப்படுத்தல் அலகு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு.

தாவர மற்றும் தாவர உற்பத்திகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான தனிமைப்படுத்தல் அலகொன்று யாழ்ப்பாணம் தபால் நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் அலகை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து கடந்த 22 ஆம் திகதி திறந்து வைத்தார். இலங்கையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான தாவர தனிமைப்படுத்தல் அலகானது கட்டுநாயக்கவில் மாத்திரமே காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாண தபால் நிலையத்திலும்  தாவர தனிமைப்படுத்தல் அலகு திறந்து வைக்கப்பட்டமையானது வடமாகாணத்தில் தாவர ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில்

தாவர தனிமைப்படுத்தல் அலகு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு. Read More »

பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் திறப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  சுமார் 4000 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு,

பருத்தித்துறைஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் திறப்பு Read More »

விவசாய டிஜிட்டல்வலையமைப்புக்குள் ஒன்றிணையவும் – FARMTO GATE இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்  வழிகாட்டுதல்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட FARM TO GATE இணைய செயலியை,  கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கான இணைய வழி சந்தை வாய்ப்புகளுக்கு வசதியளிக்கும் வகையில் FARM TO GATE இணைய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டக்கூடிய ஒரு

விவசாய டிஜிட்டல்வலையமைப்புக்குள் ஒன்றிணையவும் – FARMTO GATE இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்கள் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234.83 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பலாலி ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது குறித்த காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவித்து, அதற்கான ஆவணத்தை யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கையளித்தார். இன்று விடுவிக்கப்பட்ட காணிகளை ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும். அதற்கமைய விவசாயிகளுக்கு தேவையான விதை பொருட்களும் கௌரவ ஜனாதிபதியால்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு Read More »

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர்  (Andrew Traveller), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு Read More »

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று  (19.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு Read More »

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே கௌரவ ஆளுநர் இவ்விடயத்தை குறிப்பிட்டார். போலியோ தடுப்பு மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டசிறந்த சேவைகளை ரோட்டரி கழகம் முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய  செயல்திட்டத்தின் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அவர்கள் கலந்து சிறப்பித்தார். கனேடிய உலக பல்கலைக்கழக சேவை (WUSC)அமைப்பானது  GRIT  எனும் புதிய  செயல்திட்டத்தை ( Growth, Resilience,  Investment and training ) வளர்ச்சி, மீண்டெழும்தன்மை,  முதலீடு மற்றும் பயிற்சி ஆகிவற்றை நோக்கமாக கொண்டு ஆரம்பித்துள்ளது.  GRIT  செயல்திட்டமானது  வட மாகாணத்திலுள்ள பெண் தொழில்முனைவோருக்கான,

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளும் தேவைப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார். சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளதால் அதனை

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு Read More »