ஆளுநர்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை அறிந்து உரிய தீர்வுகளைபெற்றுக் கொடுப்பதற்காக நேரடியாக நடமாடும் சேவை இடம்பெற்றஉள்ளது

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் – பி. ப 4.00 வரை பொதுமக்களை சந்திக்க உள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி […]

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் குறைகளை அறிந்து உரிய தீர்வுகளைபெற்றுக் கொடுப்பதற்காக நேரடியாக நடமாடும் சேவை இடம்பெற்றஉள்ளது Read More »

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்  இன்று 02.11.2024  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல் Read More »

கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும்பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீடு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 30.10.2024 திகதி இடம்பெற்ற கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய ‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன்,விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ம.ஜெகு,  மாகாண நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.சுதாகரன், கலாநிதி.பா.கேதீசன் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியல் பீடம் கிளிநொச்சி, ஆகியோர்

கலாநிதி.(எந்திரி).சுப்பிரமணியம் சிவகுமார் எழுதிய‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும்பங்கீட்டுக்கொள்கையும்’ நூல் வெளியீடு Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்து செய்தி

இத் தீபத் திருநாளில் உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் ஒளிரட்டும்.  மக்களின் மனதில் அன்பு, அமைதி, சந்தோஷம் என மூன்றையும் பரப்பும் ஒரு அழகிய ஒளியாய் இந்த தீபாவளி பண்டிகை ஒவ்வொரு தனிமனிதனின் கனவையும் நிறைவேற்றும் ஒரு புதிய ஒளியாக அமைந்திட வேண்டும். தீபாவளி பண்டிகையானது தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. அந்த வகையில் இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது வாழ்வினைச் செம்மையாக்கும்  மனிதநேய ஒருமைப்பாட்டை  வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. இத் தீபாவளி திருநாளில் வட

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்து செய்தி Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை

யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை 29.10.2024 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் சந்தித்தார். பாசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிபுரை வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்தனர் என்ற செய்தியை அறிந்து ஆளுநர் அவர்கள் இந்த நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள பணித்தார். பாடசாலைக்கு

வடக்கு மாகாண ஆளுநரின் விரைவான நடவடிக்கை Read More »

விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் 29.10.2024 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், வலிவடக்கு பிரதேசசபையின் செயலாளர், சிவில் சமுக

விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று (29.10.2024) காலை ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோபாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் Read More »

மாகாண மட்டஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு

வடக்கு மாகாண மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை  மாணவர்களுக்கான கௌரவிப்பு இன்று (24.10.2024)  தென்மராட்சி கல்வி வலயத்தில்  நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டார். தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு.கிறிஸ்தோபர் கமலராஜன் தலைமையில் இடம்பெற்ற  இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்வி சார்ந்த அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பெருந்திரளானோர்

மாகாண மட்டஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

 வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (23/10/2024) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அமெரிக்க தூதுவர் காணி விடுவிப்பு தொடர்பாக விபரங்களை  கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (08.10.2024) காலை  காணிப் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர்,  ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும்  மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காணி இல்லாத பொது மக்களுக்கு காணிகளை வழங்குவதை விடுத்து வசதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கௌரவ ஆளுநர் தெரிவிக்கையில், ஏழை

வடக்கு மாகாண காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வு Read More »