ஆளுநர்

வடமாகாணத்தில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது

வட மாகாண நன்னடத்தை பாதுகாவல் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் ‘’பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’’ எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில் 05.10.2024 திகதி காலை இடம் பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.இ. இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், திரு.ஜே. எஸ். அருள்ராஜ் செயலாளர் சுகாதார அமைச்சு வட மாகாணம், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். வட மாகாண […]

வடமாகாணத்தில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது Read More »

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

இன்று (04.10.2024) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், , வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன்,யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெ.அருள்ராஜ் ,வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ..கேதீஸ்வரன், பிரதேச செயலாளர், இராணுவம், கடற்படை, போலீஸ் போன்றவற்றின் உயர் அதிகாரிகளும் சுகாதார உத்தியோகஸ்தர்கள் யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர்கள் ஆகியோர்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் 03.10.2024 காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது தனியார் போக்குவரத்து சபையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு தனியார் பேரூந்து நிலையம், பஸ் தரிப்பிடங்களில் காணப்படும் வசதி வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அரச போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து

வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது

இன்றிலிருந்து (03.10.2024) கௌரவ ஆளுநர் அவர்களுடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக இருந்த புதன்கிழமைக்கு பதிலாக திங்கட்கிழமையினை பொதுமக்கள் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்படுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது Read More »

2024 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கண்காட்சி யாழில்ஆரம்பம்

“காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சூழல் நேயமான நிலைபேறான விவசாய யுகம் நோக்கி” என்ற தொனிப் பொருளில் வடக்கு மாகாண விவசாய கண்காட்சி திருநெல்வேலியில்  அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று (02.10.2024) ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி  ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணப் பிரதம  செயலாளர்  திரு. இ.இளங்கோவன் அவர்களும், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாய 

2024 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கண்காட்சி யாழில்ஆரம்பம் Read More »

யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது.

02.10.2024ந் திகதி மகாத்மா காந்தியின் 155வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மத்திய  நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி அவர்களும், யாழ் மாநகர சபை  ஆணையாளர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்துசிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து  கலந்துரையாடல் இடம்பெற்றது. இறுதியில் கௌரவ ஆளுநர் அவர்கள் கலாசார மத்திய நிலையத்தை முழுமையாக

யாழ் கலாசார மத்திய நிலையத்தில் மர நடுகை இடம்பெற்றது. Read More »

சுற்றுலாத்துறை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை 01.10.2024ந் திகதி (இன்று) இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் ஆராய்ந்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர், சுற்றுலாத்துறை பணியக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் – யாழ்ப்பாணம், திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் 27.092024 அன்று காலை  ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஆளுநரின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதிய ஆளுநரை வரவேற்க உயர் அதிகாரிகள், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். ஆளுநர் செயலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வின்போது புதிய கௌரவ ஆளுநர் நா.

வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். Read More »