ஆளுநர்

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 15.03.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களுடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் 51ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியும் பங்கேற்றார். ‘இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இவ்வாறான நிகழ்வுகள் அவசியம். இனரீதியான சிந்தனைக்கு அப்பால் மக்கள் என்ற ரீதியில் இப்படியான உதவிகள் வழங்கல்கள் […]

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. Read More »

குறிஞ்சாதீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆளுநர் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 14.03.2025 அன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது. குறிஞ்சா தீவில் இலங்கை உப்புக் கூட்டுத்தாபனமே உப்பளத்தை நடத்தவுள்ளதாக, உப்புக் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார். அந்தக் காணியை அளவீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதனை உப்புக்கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர், வடக்கு மாகாண

குறிஞ்சாதீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆளுநர் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் கடலட்டை தொழிலை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வுகளும் காணப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 14.03.2025 அன்று வெள்ளிக்கிழமை கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது. ‘ஏழை மீனவர் ஒருவர் கலட்டை பண்ணை ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்தால் அதற்கு இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. இதுவே வசதிபடைத்த ஒருவர் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகின்றது. ஏன் ஏழை

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு

வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வீதி அபிவிருத்தி மிக மிக முக்கியமானது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் 13.03.2025 அன்று வியாழக்கிழமை  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கடற்கரையோரமாகச் செல்லும் இந்த வீதியின் பாதுகாப்புச் சுவர்கள் கூட கடந்த காலத்தில் விழுந்துள்ளன.

பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு Read More »

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 13.03.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. கடற்றொழில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு Read More »

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் 12.03.2025 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், கலாசார நிகழ்வுகளும் அரங்கில் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர்,

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. Read More »

கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்வி இல்லாமல் எதுவுமில்லை. மாணவர்கள் அதை நினைவிலிருத்தி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆலோசனை கூறினார். கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர், பாடசாலைக்கு வருவதற்கான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தார். அதேபோல பாடசாலைக்கு அருகிலுள்ள

கிளிநொச்சி சிவபாதகலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் 12.03.2025 அன்று புதன் கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கு பெருந்தொகை வேலை வாய்ப்பு

கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாணஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டது.

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து

அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாணஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

போகஸ்வெவ மகா வித்தியாலத்தில்அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

எமது மாகாணத்துக்கு தென்மாகாணங்களிலிருந்து வரும் சிங்கள ஆசிரியர்களும் இடமாற்றங்களைக் கோருகின்றனர். இதனால் இங்குள்ள மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலைமை நீடிக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு கற்கும் மாணவர்கள் இந்தப் பிரதேசத்துக்கே ஆசிரியர்களாக வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள போகஸ்வெவ மகா வித்தியாலத்தில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி 12.03.2025

போகஸ்வெவ மகா வித்தியாலத்தில்அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »