ஆளுநர்

அளவெட்டி தெற்கு கலைவாணி சனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது

இளையோரை சமூகப்பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இத்தகைய வழிகளை இவ்வாறான கிராமமட்ட மக்கள் அமைப்புக்கள்தான் முன்னெடுக்க முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். அளவெட்டி தெற்கு கலைவாணி சனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலையை சமயாசாரப்படி திறந்து வைக்கும் நிகழ்வு 20.03.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், சனசமூக நிலையத்தின் […]

அளவெட்டி தெற்கு கலைவாணி சனசமூக நிலைய முன்றலில் உருவாக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறந்து வைக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 19.03.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. யுனொப்ஸ் நிறுவனத்தில் கென்யாவில் பணிபுரியும் கலாநிதி வி.நவநீதன் அவர்கள் இந்த இரு நாள் பயிற்சிக் கருத்தரங்கின் வளவாளராகக் கலந்துகொண்டார். ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் –

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்’ தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு Read More »

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் இணைத் தலைமையில் இடம்பெற்றது

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 18.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக்

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் இணைத் தலைமையில் இடம்பெற்றது Read More »

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 17.03.2025 அன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த காலங்களில் திறந்து வைக்கப்பட்டாலும் அவற்றின் தேவைப்பாடுகள் முழுமைப்படுத்தப்படாமையால் வினைத்திறனுடன் செயற்படமுடியாத

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 16.03.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். திருவையாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தின் கீழ் 500 ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக நீர்பாசனப் பொறியியலாளர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். அங்கு சூரியமின்கலம் (சோலர்) மூலமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுவதால் ஏற்று நீர்பாசனத்துக்காக விவசாயிகளிடமிருந்து குறைவான தொகையே அறவிடப்படுவதாக

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார். Read More »

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால், பொலிஸாரிடம் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். இது ஆபத்தான நிலைமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் 16.03.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறக்கட்டளையின் தலைவரும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளருமான மருத்துவக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழா, கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது Read More »

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 15.03.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. நாகவிகாரையின் விகாராதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களுடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் 51ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியும் பங்கேற்றார். ‘இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இவ்வாறான நிகழ்வுகள் அவசியம். இனரீதியான சிந்தனைக்கு அப்பால் மக்கள் என்ற ரீதியில் இப்படியான உதவிகள் வழங்கல்கள்

சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. Read More »

குறிஞ்சாதீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆளுநர் கலந்துரையாடல் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 14.03.2025 அன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது. குறிஞ்சா தீவில் இலங்கை உப்புக் கூட்டுத்தாபனமே உப்பளத்தை நடத்தவுள்ளதாக, உப்புக் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார். அந்தக் காணியை அளவீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதனை உப்புக்கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர், வடக்கு மாகாண

குறிஞ்சாதீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் ஆளுநர் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் கடலட்டை தொழிலை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வுகளும் காணப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 14.03.2025 அன்று வெள்ளிக்கிழமை கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது. ‘ஏழை மீனவர் ஒருவர் கலட்டை பண்ணை ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்தால் அதற்கு இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. இதுவே வசதிபடைத்த ஒருவர் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகின்றது. ஏன் ஏழை

கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு

வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வீதி அபிவிருத்தி மிக மிக முக்கியமானது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் 13.03.2025 அன்று வியாழக்கிழமை  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கடற்கரையோரமாகச் செல்லும் இந்த வீதியின் பாதுகாப்புச் சுவர்கள் கூட கடந்த காலத்தில் விழுந்துள்ளன.

பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு Read More »