ஆளுநர்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பாரம்பரிய முறையிலான பயிர்ச்செய்கையைவிட நவீன முறையில் அண்ணளவாக இருமடங்கு விளைச்சல் கிடைக்கப்பெறுகின்றது. அதனை விவசாயிகளிடத்தில் ஊக்குவிப்பதில் அடுத்த ஆண்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்களை ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (13.11.2025) ஆளுநர் செயலகத்தில் […]

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம் சுற்றுலாவுக்கான சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நகரை சுத்தமாக வைத்திருக்க மக்களும் பங்களிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தை ஒரு வரைபடப் பகுதியில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றுலாவிக்கும் — பார்வையாளருக்கும் துடிப்பான, செழிப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். ‘வடக்கு இலங்கையை புதிதாய் கண்டறிதல்: இளைஞர்களுக்கு அதிகாரமளித்து புதிய சுற்றுலா அடையாளத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி நெறியில்

யாழ்ப்பாணம் சுற்றுலாவுக்கான சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நகரை சுத்தமாக வைத்திருக்க மக்களும் பங்களிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர்

உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வியாழக்கிழமை (13.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில்

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைக்கு சுற்றுலா வந்த சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்

சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள், தமது கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு 10 நாள் கல்விச் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்று புதன்கிழமை (12.11.2025) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தந்து, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை தந்தை செல்வா கலையரங்கில் சந்தித்துக் கலந்துரையாடினர். போருக்குப் பின்னரான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தப் பயணம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர் Read More »

சுற்றுலாப் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

2026ஆம் ஆண்டில் சுற்றுலாச் செல்வதற்கான உலகின் மிகச் சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலாவிகள் எந்த எதிர்பார்ப்புடன் வருகிறார்களோ, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து திருப்தியுடன் திரும்பிச் செல்லும் வகையில் எமது சுற்றுலாத்துறை சார்ந்த சேவைகள் வழங்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தினருடனான மாதாந்த கலந்துரையாடல் இன்று (12.11.2025) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்

சுற்றுலாப் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு 4 பொறியியலாளர்களும், 39 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் நியமனம்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும், நிதி ஆணைக்குழுவும் அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கு மத்திய அமைச்சுக்களின் நிதிகளை நேரடியாக வழங்குவது தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கு மிகப்பெரிய பாய்ச்சல் மிக்க ஆண்டாகவே அமையப்போகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கல் நிகழ்வு கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு 4 பொறியியலாளர்களும், 39 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் நியமனம் Read More »

1981ஆம் ஆண்டு யாழ். நூல் நிலையம் எரிக்கப்பட்டது; இது மிகப்பெரிய துன்பியல் சம்பவம் – கௌரவ ஆளுநர்

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை காலை (12.11.2025) இந்த நிகழ்வு நடைபெற்றது. இங்கு உரையாற்றிய ஆளுநர், 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் நூல் நிலையம் எரிக்கப்பட்டது என்றும் இது மிகப்பெரிய துன்பியல் சம்பவம் எனவும் குறிப்பிட்டார்.

1981ஆம் ஆண்டு யாழ். நூல் நிலையம் எரிக்கப்பட்டது; இது மிகப்பெரிய துன்பியல் சம்பவம் – கௌரவ ஆளுநர் Read More »

பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதமாகவும், வேண்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி

பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார். Read More »

கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன. – கௌரவ ஆளுநர்

மாற்றுத்திறனாளிகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களை முன்வைத்தாலும் அதற்கும் நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொதுவேலைத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஏற்பாட்டில், இணைந்து ஒளிரும் மலர்கள் (Inclusive Talent Show) நிகழ்வு கொடிகாமம் நட்சத்திர மஹாலில் இன்று செவ்வாய்க்கிழமை (11.11.2025) நடைபெற்றது.

கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன. – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநர் அவர்களுக்கும், வவுனியா – கிராமிய பெண்கள் அமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வவுனியா – கிராமிய பெண்கள் அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (11.11.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்கான ஆதரவு குறிப்பு நூல் ஆளுநருக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தம்மால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் அதன் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களையும் ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்

கௌரவ ஆளுநர் அவர்களுக்கும், வவுனியா – கிராமிய பெண்கள் அமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »