ஆளுநர்

ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நேரடி பயணமொன்றை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாகாண நிர்வாகத்தினர் எவ்வித தாமதமுமின்றி நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். ஆளுநர் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூராய், […]

ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம்

இயற்கைப் பேரிடரால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில், அவர்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவ்வாறான சங்கங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டுச் செல்லலாம், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (01.12.2025) பிற்பகல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் தனது அதிருப்தியை

இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம் Read More »

இடர் நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கவும்: மோசடிகளைத் தவிர்க்க வடக்கு ஆளுநர் வேண்டுகோள்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை ஆளுநர்

இடர் நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கவும்: மோசடிகளைத் தவிர்க்க வடக்கு ஆளுநர் வேண்டுகோள் Read More »

பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (01.12.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் இக்காலக்கட்டத்தில், தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை மீளமைப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான

பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இணையவழியாக இடம்பெற்றது.

இன்று (01.12.2025) திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இணையவழியாக இடம்பெற்றது. இதன்போது, இடருக்குப் பின்னரான காலப்பகுதியில் அந்தந்த மாகாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியால் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மாகாணங்களின் தற்போதைய களநிலவரம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். வடக்கு மாகாணத்தின் நிலைவரம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்த ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பின்வரும் விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்: முல்லைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இணையவழியாக இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களின் தற்போதைய நிலவரம்

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை (30.11.2025) மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்தவண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின் அளவு கணிசமான அளவு குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாகாணத்தின் தற்போதைய நீர்ப்பாசன நிலவரம்: இரணைமடு குளத்தின் நிலை: நேற்று சனிக்கிழமை (29.11.2025) நண்பகல் 40 அடி

வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களின் தற்போதைய நிலவரம் Read More »

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் களவிஜயம் மேற்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை (29.11.2025) கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அவசர களப்பயணத்தை மேற்கொண்டார். மாவட்டச் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் களத்தில் நின்றவாறு நிலைமைகளை ஆராய்ந்த ஆளுநர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார். முதலாவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்குப் பயணம் செய்த ஆளுநர், மாவட்டச் செயலர் சு.முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடினார். நேற்று

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் களவிஜயம் மேற்கொண்டார். Read More »

வடக்கில் கடும் மழை: 36 குளங்கள் வான் பாய்கின்றன – உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ள குளங்களின் அணைகளை வெட்ட நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (28.11.2025) காலை 9.00 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு: மாங்குளம் மற்றும் வவுனியா பகுதிகளில் சடுதியான அதிக மழைவீழ்ச்சி

வடக்கில் கடும் மழை: 36 குளங்கள் வான் பாய்கின்றன – உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ள குளங்களின் அணைகளை வெட்ட நடவடிக்கை Read More »

அசாதாரண காலநிலை: வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் பயிற்சித் தரம் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் நாளை சனிக்கிழமை 29.11.2025 மற்றும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை 30.11.2025 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்தன. எனினும்,

அசாதாரண காலநிலை: வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு Read More »

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை – 27.11.2025

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று வியாழக்கிழமை (27.11.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 21 குளங்கள் வான்பாயும் நிலையில் உள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார். வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குளங்களின் நீர்மட்ட விவரங்கள் பின்வருமாறு: வான் பாயும் நிலையிலுள்ள குளங்கள்: 21

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை – 27.11.2025 Read More »