வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர்
தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 15 ஜனவரி 2019 அன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல் பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார். இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் தற்போது வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதனை சுட்டிக்காட்டியதுடன் அந்த நிலைமையினை மாற்றி 2020, 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் […]
