ஆளுநர்

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர்

தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 15 ஜனவரி 2019 அன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல்  பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார். இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் தற்போது  வடக்கு மாகாணத்தில்  ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதனை சுட்டிக்காட்டியதுடன் அந்த நிலைமையினை மாற்றி 2020, 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் […]

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர் Read More »

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னார் முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநருடைய யாழ்ப்பாணஉத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு Read More »

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் 07 ஜனவரி 2019 அன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் Read More »

புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 09 ஜனவரி 2019 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் வட மாகாண ஆளுநரை வரவேற்றார். சமயத் தலைவர்கள், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,   முன்னாள் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனோல்ட், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடக்கு மாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,

புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் Read More »