ஆளுநர்

பிரித்தானியான அரசாங்கத்தின் இராஜதந்திரி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்

பிரித்தானியான அரசாங்கத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியும் இந்திய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான திரு.பேர்கஸ்  ஓல்ட் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 23 ஜனவரி 2019 அன்று முற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் சந்தித்தார்.

பிரித்தானியான அரசாங்கத்தின் இராஜதந்திரி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார் Read More »

வடக்கில் இராணுவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு

வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும்  இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில்22 ஜனவரி 2019 அன்று  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய அவர்கள் காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை கௌரவ

வடக்கில் இராணுவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு Read More »

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 22 ஜனவரி 2019  அன்று முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் தொடர்பாகவும் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆரயப்பட்டதுடன் இம்மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்கள், அவற்றில் மீள்குடியேறிய

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு Read More »

ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசல் மற்றும் யாழ் நகரப் பள்ளிவாசல்களுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 19 ஜனவரி 2019 அன்று  அவர்கள் விஜயம் செய்தார்.

ஆளுநர் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார் Read More »

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆளுநருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 18 ஜனவரி 2019 அன்ஞ ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச சபைகளின் கடந்தகால நிகழ்கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

ஆளுநர் பல்வேறு சமயத்தலைவர்களை சந்தித்தார்

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 15 ஜனவரி 2019  மற்றும்  16 ஜனவரி 2019 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூ~ணி அம்மான் கோவில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே

ஆளுநர் பல்வேறு சமயத்தலைவர்களை சந்தித்தார் Read More »

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர்

தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 15 ஜனவரி 2019 அன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல்  பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார். இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் தற்போது  வடக்கு மாகாணத்தில்  ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதனை சுட்டிக்காட்டியதுடன் அந்த நிலைமையினை மாற்றி 2020, 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின்

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர் Read More »

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னார் முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநருடைய யாழ்ப்பாணஉத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு Read More »

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் 07 ஜனவரி 2019 அன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் Read More »

புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 09 ஜனவரி 2019 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் வட மாகாண ஆளுநரை வரவேற்றார். சமயத் தலைவர்கள், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,   முன்னாள் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனோல்ட், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடக்கு மாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,

புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் Read More »