ஆளுநர்

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்

சீனத் தூதுவர் ஷீய் ஷன்ஹொங் இலங்கையின் வட மாகாணத்திற்கான தனது முதல் விஜயத்தை யாழ்ப்பாண பொது நூலகத்தில் இருந்து ஆரம்பித்தார். சீனத் தூதுவர் வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. மடிக்கணினிகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், இதன் சேகரிப்பை பெரிதாக்கவும் வழங்கப்பட்டது

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் Read More »

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தீபாவளிக்கு தீபங்களின் வரிசை என்பது பொருளாகும். உலகில் உள்ள சகல இந்துக்களும் இத்தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பண்டைய காலத்திலிருந்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன ஒரு கொண்டாட்டமாகும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற்கேற்ப தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது . இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து ஒளிமயமான வாழ்வு பிரகாசிக்க வேண்டும் என்று தீபங்களால் எம் மனங்களில் விளக்கேற்றுவோம்.

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11. 10. 2021) காலை 10 மணியளவில்  மெய்நிகர் செயலி ஊடாக  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், பிரதம செயலாளர் ,வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ,மற்றும் கல்வித் துறைசார் பணிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

யாழ் மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு அமைவாகவும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலில் மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நயினாதீவு கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம், தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் மற்றும் யாழ்-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் இன்று (06.10.2021) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நிகழ்வை மாண்புமிகு பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இணையவழி மெய்நிகர் தொழில்நுட்பம்

யாழ் மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்  இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில்    கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் ஆளுநர் செயலகத்திலிருந்து இணைந்திருந்தார். இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு  வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மெய்நிகர் இணைய வழி மூலமான கலந்துரையாடல் Read More »

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா

தேசிய அளவில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் திறப்பு விழாவானது 04.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு கௌரவ பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் இணைய வழி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு செயலாளர் கௌரவ சிறி ஹர்ஷ வர்தன் ஸ்ரீ றீங்லா அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வின் துணை நிகழ்வு மற்றும் வட/மத்திய மகளிர்

இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா Read More »

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021

வட மாகாணத்தில் கடந்த இரு வருட காலப்பகுதியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையிலும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழும் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான அறிவித்தலை வழங்கும் நோக்கில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் கடந்த புதன் கிழமை (29 .9 .2021 ) மதியம் வடமாகாண

வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021 Read More »

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது.

நேற்றைய தினம் (2021.09.09) யாழ் மாவட்டத்துக்கான களவிஜயத்தை மேற்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் யாழில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக பார்வையிட்டார். இவ் விஜயத்தின் போது, வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்ட தாளையடி தபால் நிலையத்திற்கான ஆவணத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் தபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமாரிடம் கையளித்தார்.

தாளையடி உப தபால் நிலையம், தபால் நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. Read More »

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா

வவுனியா மாவட்ட மரக்காரம்பளைப் பிரதேசத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட பாற் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 15 யூலை 2021 அன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழிற்சாலையை திறந்து வைத்த வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன் தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்ததுடன் இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் விவசாயிகளுக்கான சந்தை

பாற்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா Read More »