முல்லைத்தீவு மல்லாவி வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் தொழில்முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாய கண்காட்சி ஆரம்பமானது.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலை தொழில்முனைவோர் தோட்டக்கலை நிகழ்ச்சித் திட்டத்தின் விவசாயக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர் […]
