விவசாய அமைச்சு

வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவுகையினால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்வது பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உணவப் பற்றாக்குறை ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுவதனால் அதனை எதிர்கொள்ளும் நோக்கில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்; “CRIWMP” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தில் உலுக்குளம், செட்டிக்குளம், கோவில்குளம், பம்பைமடு மற்றும் மடுக்கந்த விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நெல் மற்றும் மறு வயற்பயிர்களிற்கான விதை உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சிறுபோகம், […]

வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி Read More »

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண

சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி

தேன் உற்பத்திக்காகதேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் எனும் பயிற்சி நெறியானது வட்டக்கச்சியிலுள்ள மாவட்டவிவசாயப் பயிற்சிநிலையத்தில் 26.02.2020 ஆம் திகதி நடைபெற்றது. இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகை நிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் திருமதி.லோட்டாகிறிஸ்ரியன்சன் அவர்களும் கலந்துகொண்டனர். மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் இப் பயிற்சிநெறியில் பங்குபற்றிப் பயனடைந்தனர் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் இப் பயிற்சிநெறியினை ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சிநெறியில்

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையைஊக்குவித்தலும்தொடர்பானபயிற்சிநெறி Read More »

விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொல்லவிளாங்குளம் எனும் கிராமத்தில் வ.பிறேமச்சந்திரன், அ.தர்மகுலசிங்கம் ஆகிய இரு விவசாயிகள் கூட்டாக இணைந்து 2 ஏக்கரில் நாற்று நடுகை மூலம் விதை உற்பத்தி மேற்கொண்ட வயலில் விவசாயப் போதனாசிரியர் கி.கீர்த்திகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் 07.02.2020 வயல் விழா நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர்

விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா Read More »

மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளல் அவசியம். அந்த வகையில் வடமாகாண விவசாயத்திணைக்களமானது பாரம்பரிய மற்றும் போசணைமிகு உணவுகளை சுகாதாரமான முறையில் பொதுமக்களிற்கு வழங்கும் நோக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ”அம்மாச்சி ” எனும் உணவகங்ளை ஆரம்பித்து வைத்து சிறப்பான சேவையை மக்களிற்கு ஆற்றிவருகின்றது. அந்த வகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி நகர் பகுதியில் புதிய அம்மாச்சி உணவகம் 02 ஜனவரி 2020 அன்று சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது Read More »

நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு

PEISEIP திட்டத்தின் கீழ் பாவற்குளம் பகுதியிலிருந்து நிலக்கடலை விதை உற்பத்தித் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு 22.11.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது.  PEISEIP திட்டமானது வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம், ஈரற்பெரியகுளம் மற்றும் முகத்தான் குளம் போன்ற பெரிய நீர்ப்பாசனக் குளங்களை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வினைத்திறனான நீர் முகாமைத்துவத்தினூடாக நீர் வளத்தை பாதுகாத்தல்  போன்றன காணப்படுவதுடன் விவசாயத் திணைக்களத்தின்

நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு Read More »

நடமாடும் விற்பனை மூலம், மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் அரச விதை உற்பத்திப் பண்ணை, ஐந்து மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் கருமூல வள நிலையம் என்பனவற்றில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராகவிருக்கும் மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பன நடமாடும் சேவை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள், அலுவலகத் தோட்டங்கள் என்பனவற்றினை அமைத்தலையும் அவற்றினை மேம்படுத்துவதற்குத் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் இவ் நடமாடும் விற்பனையானது நடைபெற்று வருகின்றது. மேலும் பசுமையான

நடமாடும் விற்பனை மூலம், மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகளின் விற்பனை தொடர்பான விபரங்கள் Read More »

பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் கடந்த சிறு போகத்தைப் போன்று இக்கால போகத்திலும் (பெரும் போகம்) மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்ட மானது அமுல்படுத்தப் பட்டுள்ளது. விவசாயத் துறை மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகின்ற இக்காலகட்டத்தில் பெரும் போக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு புத்துயிரளித்து இளையோரை விவசாயத்தில் நாட்டம் கொள்ளச் செய்கின்ற வகையில் மாகாண விவசாயத் திணைக்களமானது ஒக்டோபர் 7 தொடக்கம் ஒக்டோபர் 12 வரையான காலத்தை விசேட விவசாய ஊக்குவிப்பு

பெரும் போகம் 2019 / 2020 இற்கான விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் – வடமாகாணம் Read More »

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் அந்நிய ஆக்கிரமிப்புக் களையான பாத்தீனியம் தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று 12.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. பாத்தீனியமானது பயிர் மற்றும் மேய்ச்சல் களையாக விளங்குவதுடன் மனிதர்களிலும், கால்நடைகளிலும் ஒவ்வாமைகளையும், சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தவல்லது. களைகொல்லிகளைத் தாங்கிவளரும் இந் நச்சுக் களைகளானது பயிர் உற்பத்தியில் பாரியபின்னடைவை ஏற்படுத்துவதுடன் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. இந் நிலையில் இந் நச்சுக் களை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை

பாத்தீனியம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி Read More »

சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் (Solar energy  integrated crop cultivation) தொடர்பில் பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. தற்காலத்தில் மிக ஆழமான நீர் முதல்களிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதற்கு இலவச சக்தியாக சூரிய சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிலவேளைகளின் இதன் மூலம் கிடைக்கப்பெறும் மேலதிக ஈட்டம் வீட்டுத் தேவைக்காகவும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. இச் சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரை குறைந்தது 40 அடி உயரத்திற்கு

சூரியக் கலத் தொகுதியுடன் கூடிய பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பம் Read More »