விவசாய அமைச்சு

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா

யாழ் மாவட்டத்தில் பெரும்போகம் 2023/2024 இல் உருளைக்கிழங்கு செய்கையில் உள்ளுர் விதை கிழங்கினை நடுகைக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளை கண்டறிவதற்காக மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 732 kg ரெட் லசோடா உள்ளுர் விதை கிழங்கு சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் , நீர்வேலி , உரும்பிராய், புத்தூர், ஆவரங்கால் , அச்சுவேலி மற்றும் வசாவிளான் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் முன்மாதிரி துண்டமாகச் செய்கை பண்ணப்பட்டது. இவ்விதை உருளைக்கிழங்கானது சீதா எலிய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இழைய வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இழைய […]

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா Read More »

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்டத்தில் எள்ளு செய்கையை முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பயனாளிகளிற்கு 1/2 ஏக்கர் வீதம் ANKSE-4 வர்க்க எள்ளு விதைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் வஞ்சியன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கள்ளியடிப்பிட்டி கிராமத்தில் திரு. மயில்கண்ணன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு 1.5 கிலோ கிராம் எள்ளு விதைகள் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி து. ஆ. ஸ்ரெல்லா விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக எள்ளு

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மத்திய விவசாயத் திணைக்கள நிதி உதவியுடன் மாகாண விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்ட ரீதியில் செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பயனாளிகளிற்கு 0.25 ஏக்கர் வீதம் MICH Hy-1 வர்க்க மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கொண்டச்சி விவசாய போதனாசிரியர் பிரிவில் திரு. ந. நலீன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 கிராம் விதை மிளகாய் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி டிவைனி பீரீஸின் விவசாய

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம் Read More »

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம்

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை வவுனியா பொதுச்சந்தை முன்றலில் 01.03.2024 தொடக்கம் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் நடைபெற்று வருகின்றது. இக் கருத்துருவானது CABI என அழைக்கப்படும் “Center for Agriculture & Bio Science International ” நிறுவனத்தினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக சில தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது வெற்றியளிக்கப்பட்டிருந்ததன் விளைவாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் பயிர்ச்சிகிச்சை முகாமாகவும், நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமாகவும்

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம் Read More »

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் 2023/24 காலபோகத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி (CRIWMP) திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் பரசூட் முறையை ஊக்கவிக்கும் முகமாக 20 ஏக்கர்களில் பரசூட் முறை மூலம் நடுகை செய்யப்பட்டது. அதற்கமைவாக ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் இசங்கன்குளம் பகுதியில் விவசாய போதனாசிரியர் செல்வி ஞா. கஜகர்ணியின் ஆலோசனைகளுக்கு அமைவாக திரு க.வேதநாயகம் எனும் விவசாயி குறித்த முறைமூலம் நெற்செய்கை மேற்கொண்டிருந்தார். மேற்படி நெற்செய்கையின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள்

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 100 பயனாளிகளை உள்ளடக்கியதாக வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்டமானது 5 கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கென பயனாளி ஒருவருக்கு 100 பொலித்தீன் பைகளும், தாங்கியுடன் கூடிய சிறிய அளவிலான சொட்டு நீர்ப்பாசனத் தொகுதியும் காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தினூடாக (CRIWM) உள்ளீடுகளாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் வயல் விழா நிகழ்வானது கலசியம்பலாவ கிராமத்தில் 08.02.2024 அன்று பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின்

வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு Read More »

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெல் விதைப்பானது பெரும் போகம் 2023/24 இல் 32 ஏக்கர் நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கான வயல் விழா நிகழ்வானது 08.02.2024 அன்று கலசியம்பலாவ கிராமத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி. யு. சரத்சந்திர அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. மரியதாசன் ஜெகூ, மாகாண

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 நிகழ்வு சர்வதேச மண் தினமான 05.12.2023 செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற மண்தின நிகழ்வின்போது விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 Read More »

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி

‘சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி’ எனும் தொனிப்பொருளிலான வயல்விழா நிகழ்வு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சியில் 05.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் வெகு விமர்சியாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ,

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின சோளம் (MI Maize Hybrid 04) விதை உற்பத்தி அறுவடை வயல் விழா 04.10.2023 அன்று புலவனானூர், பூவரசன்குளம் கிராமத்தில் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் வவுனியா மாவட்ட நவீன மறுவயற்பயிர் விதை உற்பத்தியாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஊடுகளைகட்டும்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா Read More »