விவசாய அமைச்சு

வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் உடுவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 09.02.2021 ஆம் திகதி  நடை பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மருதனார்மட விவசாயக்கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். விதையிடும் கருவியை பயன்படுத்தி நெல்லை வரிசையில் விதைத்து பயிர்செய்கை மேற்கொள்வதன் […]

வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா Read More »

நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம்

வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் கலாநிதி. ஜயந்த அவர்களும் இணைந்து மன்னார் மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை 03.01.2021 ஆம் திகதி  மேற்கொண்டிருந்தனர். இக்கள விஜயத்தில் சேனாநாயக்க உதவி விவசாய பணிப்பாளர் கலாநிதி ரீ.கே. இலங்ககோன், மண் விசேடத்துநர் கலாநிதி. டபிள்யூ.எம்.யூ.கே ரட்னாயக்க, இனவிருத்தி விசேடத்துநர் கலாநிதி பாகிம், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் சி.சிவநேசன் மற்றும் மாகாண விவசாயபணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட பிரதி

நெல் உற்பத்தியினையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதற்கான கள விஜயம் Read More »

உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம்

கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக. விவசாயத் திணைக்களத்துடன் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனம் இணைந்து உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மிளகாய் செய்கையின் மூலம் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிக்கும் செயல் திட்டத்தினை வட

உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம் Read More »

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், வடக்கு மாகாணத்தின் விவசாயிகள், பண்ணையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த அக்கறையுடைய தரப்பினர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை, தீர்வு செய்வதற்கான செயற்றிட்டம் ஒன்று பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த செயலமர்வு, முதற்கட்டமாக எதிர்வரும் 27.01.2021 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட, நானாட்டான் பிரதேச செயலத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட, வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலும், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாண விவசாயிகளின் தேவைகனை கேட்டறியும் செயலமர்வு முதற்கட்டமாக நானாட்டான் மற்றும் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது Read More »

நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளிற்கான மேம்படுத்தல் நிகழ்வு

தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளிற்கு மேம்படுத்தப்பட்ட விவசாய விரிவாக்கல் சேவைகளை வழங்கும் முகமாக நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளின் அபிவிருத்தி நிகழ்வானது கடந்த 23/12/2020 புதன்கிழமை அன்று தண்டுவான் விவசாய விரிவாக்கல் நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு திரு அ. கபிலன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் தண்டுவான் விவசாயபோதனாசிரியர் திரு.சி.சுரேன் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பூ.உகநாதன், கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய உதவி விவசாய

நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளிற்கான மேம்படுத்தல் நிகழ்வு Read More »

இஞ்சிச் செய்கை வயல் விழா

யாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், உதவி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள்

இஞ்சிச் செய்கை வயல் விழா Read More »

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு விவசாய தொழிலுட்ப பயிற்சி வழங்குபவர்களுக்கான பயிற்சி

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு தொழிநுட்பம் தொடர்பான அறிவூட்டுபவர்களுக்குமான பயிற்சியானது ஐந்து தலைப்புகளின் கீழ் 25 நாட்கள் (2021.01.04 – 2021.02.05) வெவ்வேறு பயிற்சி நிலையங்களில் நடைபெறுகின்றன. அதன் பிரகாரம் இப்பயிற்சிக்காக வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் 3 தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் வீதம் 15 தொழிநுட்ப உத்தியோகத்தர்களும், மற்றும் கிழக்கு மாகாணம், மாகாண இடைவலய பிரதேசம், மகாவலி வலயம் என்பவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 35 பயிற்றுவிப்பாளர்கள் உள்ளடங்கலாக 50 தொழில்

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு விவசாய தொழிலுட்ப பயிற்சி வழங்குபவர்களுக்கான பயிற்சி Read More »

முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வயல் விழாவும் விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும்

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் முல்லைத்தீவில் வயல் விழாவும் விதை, நடுகைப்பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் தலைமையில் கடந்த 19.12.2020 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் மற்றும் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த வயல் விழாவில் காளான் உற்பத்தி,

முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வயல் விழாவும் விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும் Read More »

வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும்

மன்னார் மாவட்டம் இரணை இலுப்பைக் குளம் மற்றும் காக்கையன் குள விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளின் விவசாயிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அப்துல் சுகூறு தலைமையில் இரணை இலுப்பைக்குளம் கமநல கேந்திர நிலையத்தில் 17.11.2020 ஆம் திகதி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளார் திரு.சி.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பிரிவிற்குரிய விவசாயப் போதனாசிரியர்கள் மூலம்

வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும் Read More »

புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு

கடந்த 02.12.2020 மற்றும் 03.12.2020 ஆம் திகதிகளில் வடமாகாணத்தின் ஊடாக கடந்த புரவிப் புயலின் தாக்கம் காரமணாக கிடைத்த கனமழை, விவசாய மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புக்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பாக பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். மேற்படி களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம், கிளிநொச்சிக்குளம், கனகாம்பிகைக்குளம் மற்றும் அக்கராயன் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு குறித்த குளங்களுக்குரிய பொறியியலாளர்களான எந்திரி.எஸ்.பரணீதரன், எந்திரி.எஸ்.செந்தில்குமரன், எந்திரி.ரிசியந்தன் ஆகியோருடன் கள நிலவரங்கள் தொடர்பாக

புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு Read More »