கல்வி அமைச்சு

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024

உருத்திரபுரநாயகி உடனுறை உருத்திரபுரீசுவரர் ஆலயம் – கிளிநொச்சி. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய  பரிபாலன சபையுடன் இணைந்து நடாத்திய வடக்கு மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு 2024.03.08ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00மணிக்கு உருத்திரபுரீச்சுரர் ஆலய  முன்றலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் ம.பற்றிக் டிறஞ்சன்  அவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. மாலை 6.00மணிக்கு […]

வட மாகாண மஹா சிவராத்திரி நிகழ்வு– 2024 Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 Cross Country Race

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான Cross Country Race  போட்டி கடந்த 2024.02.17 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப இறுதி நிகழ்வில் வவுனியா மாவட்ட மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள உதவி பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.அத்துடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ சரத்சந்திர அவர்கள் வீராவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை

மாகாண விளையாட்டு விழா – 2024 Cross Country Race Read More »

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணத் தைப்பொங்கல் விழா தமிழர் மரபுகளின் படி வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (16.01.2024) நடைபெற்றது. கலாசார முறைப்படி வடமாகாண ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் நெல் வயலில் நெல் அறுவடையும் அதன் பின்னர் அதனை சூரியபகவானுக்கு அர்ப்பணிக்கும் பொங்கல் பொங்கும் நிகழ்வு ஜெயபுரம் அம்மன் ஆலயத்திலும் நடைபெற்றது. இதன் பின்னர் கலாசார கூறுகளுடன் கூடிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆளுநர்

வடமாகாண தேசிய தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில் பூநகரி ஜெயபுரம் பகுதியில் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியும் – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழாவானது கிளிநொச்சி மாவட்டத்தில் 2023-12-06 ஆம் நாள் புதன்கிழமை வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவும், பண்பாட்டியல் காண்பியக்கூட கண்காட்சியும் எனும் கருப்பொருளில் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்விழாவானது பண்பாட்டு விழா, பண்பாட்டு ஊர்வலம், பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சி என மூன்று வகையாக கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டுப்

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியும் – 2023 Read More »

வடமாகாண நவராத்திரி விழா – 2023

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகுடன் கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக்கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பன இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழாவானது 2023.10.15 – 2023.10.23 வரை தினமும் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரனையுடன் இறுதி நாளாகிய விஜயதசமி விழாவானது 2023.10.24 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கல்வி அமைச்சின்

வடமாகாண நவராத்திரி விழா – 2023 Read More »

தெய்வீக சுகானுபவம் – 09

பயிற்சிப்பட்டறை தெய்வீக சுகானுபவம் 9 இனை முன்னிட்டு இசைக்கச்சேரி நிகழ்விற்காக இந்;தியாவிலிருந்து வருகை தந்த புல்லாங்குழல் விற்பன்னர் திரு.ஜே.ஏ.ஜெயந்த் மற்றும் வயலின் விற்பன்னர் பி.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வடமாகாண இசைக்கலைஞர்களுக்காக பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்து நிகழ்த்தியிருந்தனர். பயிற்சிப்பட்டறை நிகழ்வானது 09.09.2023 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இசை ஆசிரியர்கள், கலைமன்றங்களைச்சேர்ந்த

தெய்வீக சுகானுபவம் – 09 Read More »

வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

வடக்கு மாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதியாட்டங்கள் 06.09.223 ஆம் திகதி புதன்கிழமை யாழ் மருதானார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார். பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அணியினை எதிர்த்து வடக்கு மாகாண உள்ளுராட்சி அணி மோதியது. இதில் வடமாகாணக் கல்வி அமைச்சு அணி

வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி Read More »

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் அமைக்கப்பட்ட உள்ளக பூப்பந்தாட்டத் திடல் திறப்பு விழா கடந்த 27.08.2023 ஆம் திகதி வியாழக்கிழமை வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் தலைமையில் காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும் கௌரவ விருந்தினராக கல்வி அமைச்சின்

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா Read More »

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆடிப்பிறப்பு விழாவானது 2023.07.17 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணப் பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பளை துர்க்கா

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023 Read More »

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் போட்டி

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக வடமாகாண மற்றும் வடமத்திய மாகாண இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ வு-20 கிரிக்கெட் போட்டி 12.02.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம்இ வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போட்டிக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் போட்டி Read More »