ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு வடக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும். புத்தாண்டு என்பது தனியே கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல எங்கள் சிந்தனைகளை புதுப்பித்தலுக்கான தருணமும் கூட. மகிழ்வுடன் வரவேற்கும் புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம்மில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். எங்கள் நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் – அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை வழங்குவதிலும் அரச பணியாளர்கள் […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைபற்று பிரதேச செயலர், கரைதுறைபற்று பிரதேச சபைச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர். விளையாட்டு மைதானத்தின் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது. Read More »

அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் – வட மாகாண ஆளுநர்

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) கடைப்பிடிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் நிகழ்வின் தலைமை

அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் 11.68 மில்லியன் ரூபா செலவில் 2018ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், 2024ஆம் ஆண்டு உலக மண் தினத்தை முன்னிட்டு கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024)கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் கரைதுறைபற்று பிரதேச சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது. Read More »

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேநாயகன் அவர்களுக்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும்

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் Read More »

மார்கழி இசைவிழா – 2024

யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டு கலைக்கூடல் யாழ் வணிகர் கழகம் ஆகிய இணைந்து நடத்தும் மார்கழி இசைவிழா – 2024′ இன் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை (28.12.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  

மார்கழி இசைவிழா – 2024 Read More »

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தால் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கான காணொலி வெளியீடு மற்றும் சிவாலயங்களின் வழித்தடம் கைநூல் வெளியீடு என்பன வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை (28.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் தனித்துவங்களை உள்ளடக்கி தனித்தனியான காணொலி மற்றும் மாகாணத்தின் ஈர்ப்புள்ள ஒவ்வொரு துறைகள் தொடர்பான காணொலி என்பன வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கிலுள்ள முக்கிய 27 சிவாலயங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தொகுக்கப்பட்டு

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர்

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த நலன்விரும்பிகளால், வட இலங்கை சர்வோதய குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு வெள்ளிரும்பிலான குடிதண்ணீர் பவுசர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28.12.2024) புங்குடுதீவு புஸ்பா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர் Read More »

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா

டவர் மண்டப அரங்க மன்றத்தால் நடத்தப்படும் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தமிழ் மொழிமூலமான முதலாவது பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை (28.12.2024) இடம்பெற்றது. கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர்

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா Read More »

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார்

தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றது. கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு

2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார் Read More »