September 15, 2026

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனர். இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) […]

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல் Read More »

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன

வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது அல்லது இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளைப் பிரித்து புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பில், அவற்றை எதிர்காலத்தில் வினைத்திறனுடன் நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி வல்லமை உறுதியாகக் காணப்படுமாயின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன Read More »

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் இவ்வாண்டைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன. Read More »