September 2, 2026

மாகாண வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும், நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், நிரல் அமைச்சுக்களால் வழங்கப்படும் மேலதிக நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தவும், தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கும் இடையிலான […]

மாகாண வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும், நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

மின்னணு கொள்வனவு கண்காணிப்பு முறைமை மூலம் அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஆளுநர்

அரச கொள்வனவு என்பது ஒரு நிர்வாக நடைமுறை மாத்திரமல்ல, மக்களுக்காக ஒதுக்கப்படும் பொது நிதியை வீதிகள், கட்டடங்கள், சுகாதாரச் சேவைகள், கல்வி வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகளாக மாற்றும் முக்கியப் பொறிமுறையாகும். எனவே, பெறுகை நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும் நேரடியாக மக்களுக்கான சேவை வழங்கலையும் மாகாண அபிவிருத்தியையும் பாதிக்கும் நிலையில், மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை (ePMS) வெறுமனே ஒரு இணையக் கருவியாக அல்லாது, வெளிப்படையானதும், நேர்த்தியானதும், பொறுப்புக்கூறலுடனானதுமான கொள்வனவுக் கலாசாரத்தை

மின்னணு கொள்வனவு கண்காணிப்பு முறைமை மூலம் அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஆளுநர் Read More »

யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரி அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வளப் பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சவால்களைத் துரிதமாகத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (31.08.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. குறிப்பாக

யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு Read More »

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்துக்கு நிதி; திட்ட முன்மொழிவுகளை விரைவாகத் தயாரிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து முன்வைக்கும் அளவுக்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து தொடர்புடைய திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன், மத்திய விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின்

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்துக்கு நிதி; திட்ட முன்மொழிவுகளை விரைவாகத் தயாரிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர்; தொழில்முனைவோருடன் நேரடிக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சிகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், சந்தை வாய்ப்புகளையும் முதலீட்டு தொடர்புகளையும் உருவாக்கும் முக்கிய தளமாக அமைந்துள்ள ‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ஐ வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் பார்வையிட்டு, கண்காட்சியில் பங்கேற்ற தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். வடக்கு கைத்தொழில் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் ‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் நேற்று (29.08.2026)

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர்; தொழில்முனைவோருடன் நேரடிக் கலந்துரையாடல் Read More »

கல்வித்துறையில் விசாரணைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காலதாமதமடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (29.08.2026) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முதலில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, கல்வித்துறையில்

கல்வித்துறையில் விசாரணைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு Read More »