August 25, 2026

திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணத்தில் ஒழுங்குமுறை; உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நியமத்துணைவிதிகளை உருவாக்கத் தீர்மானம்

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வானவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற […]

திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணத்தில் ஒழுங்குமுறை; உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நியமத்துணைவிதிகளை உருவாக்கத் தீர்மானம் Read More »

சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் நலன் கருதி தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநரும் கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை தாமதமின்றி வழங்கி, அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்க வேண்டும். திட்டங்கள் தொடர்பில் மக்களிடையே காணப்படும் சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்

சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் நலன் கருதி தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநரும் கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தல் Read More »

மு. கனகரட்ணம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் மருதனார்மடத்தில் திறந்து வைப்பு

இலங்கை அரச கடற்படையின் (Royal Ceylon Navy) முன்னாள் மதிப்பிற்குரிய உறுப்பினராகப் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மு.கனகரத்தினம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து தரிப்பிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மு. கனகரட்ணம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் மருதனார்மடத்தில் திறந்து வைப்பு Read More »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வடக்கு மாகாணத் திட்டங்களைப் பார்வையிட வந்த ஊடகக் குழு ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நீர் வழங்கல் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் பெறுபேறுகள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஊடகப் பயணத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் அழைத்து வரப்பட்ட ஊடகக் குழுவினர், மாகாணத்தின் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுடன் கலந்துரையாடினர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வடக்கு மாகாணத் திட்டங்களைப் பார்வையிட வந்த ஊடகக் குழு ஆளுநருடன் சந்திப்பு Read More »

பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம்

அழிந்து வரும் எமது பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பதற்கும், இளைய கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குமான சிறந்ததொரு களமாகப் ‘பாரம்பரிய கலைச்சங்கமம்’ அமைந்துள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணத்தில் மறைந்து வரும் மற்றும் காலப்போக்கில் திரிபடைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில், நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு நேற்றிரவு (23.08.2026) ஆரம்பித்து வைக்கப்பட்ட

பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம் Read More »

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் புதிதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ்

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் நியமனம்

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) திங்கட்கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் நியமனம் Read More »

ஜனாதிபதி நிதியத்தினூடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்: கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வழங்கி வைத்தார்!

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்.

ஜனாதிபதி நிதியத்தினூடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்: கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வழங்கி வைத்தார்! Read More »