வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல்; விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு
வடக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக சிறுபோகத்தில் அதிகூடிய நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் நெல் கொள்வனவு பொறிமுறைகளை விரைவுபடுத்த வேண்டும். திறைசேரியால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக வட்டியில்லாக் கடன் அடிப்படையில் நெல் கொள்வனவை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் […]
