July 28, 2026

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் இன்று (27.07.2026) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் […]

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. Read More »

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். இந்தப் பாராட்டைப் பார்த்து, இங்குள்ள ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றிய யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் செல்வன்

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27.07.2026) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர்

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. Read More »