June 17, 2026

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு […]

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read More »

பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார்.

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருவதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி,

பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார். Read More »

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட் கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில்இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் வரையான வழித்தடத்தில் மாணவர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.06.2026) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். எனவே, திட்டங்கள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கொள்வனவு நடவடிக்கைகளை

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »