February 2026

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் விரிவாக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாடு தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் […]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு

பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட

மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் Read More »

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது கட்டாயமாகும், – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்

முல்லைத்தீவு மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அங்கு பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்கப்படுவது கட்டாயமாகும், – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல். Read More »

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று திங்கட் கிழமை (09.02.2026) நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம் Read More »

சிவபெருமானின் ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

தமிழரின் பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கலை வடிவங்களில் பரதநாட்டியம் முதன்மையானது. சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் இயக்குநர் திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் மாணவியும், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் தரம்

சிவபெருமானின் ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியக் கலையைக் கற்பதில் எமது இளம் தலைமுறையினர் காட்டும் ஆர்வம், எமது கலை, கலாசாரத்தின் இருப்பை உறுதி செய்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள்; அரச, தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல், வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே விற்பனைக்கு வருகின்றது. இதனால் எமது விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, எமது நெல்லை எமது மாகாணத்திலேயே அரிசியாக்கி விநியோகிப்பதற்குத் தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை ஆலைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள், அரச மற்றும் தனியார் வங்கிப்

தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை அரிசி ஆலை உரிமையாளர்கள்; அரச, தனியார் வங்கிப் பிராந்திய முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் புதிய தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும், அத்தகவல்கள் உரிய காலத்தில் தொழில் முயற்சியாளர்களைச் சென்றடைவதில்லை என்ற

தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

“திட்டத்தை ஆவணமாக முடக்காது, நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுங்கள்” – ஆளுநர் பணிப்புரை.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘2026 – 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்’ இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக்

“திட்டத்தை ஆவணமாக முடக்காது, நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுங்கள்” – ஆளுநர் பணிப்புரை. Read More »

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுதந்திர நாள் உரையில் அழைப்பு

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கையின் சுதந்திர நாள் உரையில் அழைப்பு விடுத்தார். இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை (04.02.2026) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரலாற்றில்

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுதந்திர நாள் உரையில் அழைப்பு Read More »