October 30, 2025

விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டுத் திட்டம்

போதைப்பொருள் பாவனை நாட்டில் ஒரு தீவிரமான தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ் நிலையில் இந்தச் சவாலை தேசிய மட்டத்தில் எதிர்கொள்ளும் நோக்கோடு விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட அங்குரார்பண வைபவம் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மகாநாயக்க தேரர்கள், பேராயர்கள், இந்து குருக்கள்கள் மற்றும் மௌலவிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த அளவிலான மக்களின் பங்கேற்புடன் 30.10.2025 […]

விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டுத் திட்டம் Read More »

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

நடத்தை மற்றும் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டை சிறந்த தலைமைத்துவப்பண்புள்ளவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ (NEXTGEN LEADERS) தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 18 ஒக்டோபர் 2025 அன்று அமைச்சு அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது Read More »

கௌரவ ஆளுநருக்கு TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (29.10.2025) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர்,

கௌரவ ஆளுநருக்கு TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது Read More »