October 2025

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club of Sri Lanka) தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில் […]

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என்றபோதும் எங்களுக்குரிய தனித்துவங்களை கைவிட முடியாது. – கௌரவ ஆளுநர்

அடுத்த தலைமுறைக்கு எமது தனித்துவமான பண்பாடு, கலாசாரத்தைக் கையளிப்பதற்று இவ்வாறான பண்பாட்டுப் பெருவிழாக்கள் தேவையாக இருக்கின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (24.10.2025), கிளிநொச்சி மாவட்டச் செயலரும், மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான சு.முரளிதரன் தலைமையில், இரனைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என்றபோதும் எங்களுக்குரிய தனித்துவங்களை கைவிட முடியாது. – கௌரவ ஆளுநர் Read More »

‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறுகிய காலத்துக்குள் செல்வந்தராகவேண்டும் என்பதற்காக உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் சமூகம் தொடர்பில் சிந்திப்பதில்லை. அதேநேரம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களையும் அச்சுறுத்தியிருக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து சமூகம் எப்படியாவது போகட்டும் என்று ஒதுங்கியிருக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகமும் மாற்றம் அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய ‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச்

‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Read More »

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர்

இன்றைய இளம் சமுதாயம் முதியோரை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திய பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடும் போக்குத்தான் இப்போது இங்கு அதிகரித்து வருகின்றது. அதனால்தான் முதியோர் இல்லங்கள் உருவாகிக்கொண்டு செல்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி சிவநகர் கிராம மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை (23.10.2025) சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர்

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர் Read More »

உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர்

மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும் அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும். அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள்

உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர்

தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (22.10.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 30 அக்ரோபர் 2025)

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் விற்பனைக்காக நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் கிடைப்பனவு விபரம் இவ் வாரம், 16 – 30 அக்ரோபர் 2025 மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை – வவுனியா பூங்கனியியல் கரு மூலவளநிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணை – தேராவில் மாவட்ட விவசாய

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (16 – 30 அக்ரோபர் 2025) Read More »

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் சேவைகளை விரிவாக்கி விரைவுபடுத்தவும் வேண்டும். – கௌரவ ஆளுநர்

தவறான விடயத்தை செய்து வந்தால் அதைத் தொடர்வதற்கே விரும்புகின்றனர். அதை மாற்றுவதற்கு பின்னடிக்கின்றனர். மாற்றத்தை எல்லோரும் ஒன்றிணைந்தாலே ஏற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22.10.2025) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், காலத்துக்கு

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் சேவைகளை விரிவாக்கி விரைவுபடுத்தவும் வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநரை 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்தித்து கலந்துரையாடினார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, 51ஆவது காலாட் படைப்பிரிவின் தளபதியாக புதிதாகப் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ரிஸ்வி ரசிக், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (22.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.  

கௌரவ ஆளுநரை 51ஆவது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி சந்தித்து கலந்துரையாடினார் Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து கௌரவ ஆளுநர் அவர்கள் இன்று புதன்கிழமை காலை (22.10.2025) வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »