September 2025

ஆசிரியர்கள் ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் ஓய்வூதியம் கிடைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் என்பனவற்றுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (22.09.2025) நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை இன்னும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைகளும் அதிகரித்துச் செல்வதாகவும் கல்வி அமைச்சின் செயலரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வலய இடமாற்றச் சபையில் இருக்கும் தொழிற்சங்கத்தின் அதே பிரதிநிதி மேன்முறையீட்டுச் […]

ஆசிரியர்கள் ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் ஓய்வூதியம் கிடைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார் Read More »

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டிற்குரிய மாற்றுத்திறன் வகைப்பாட்டை உறுதிப்படுத்திய மாற்றுத்திறனுடைய வீர வீராங்கனைகளுக்கான முதலாவது மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியானது துரையப்பா விளையாட்டரங்கில் 2025.09.10ஆம் திகதி மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நடாத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்வானது காலை 8.30 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. தனுஜா லுக்சாந்தன் தலைமையில் பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025 Read More »

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும்

அரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எண்ணிமைப்படுத்தல் (டிஜிட்டலைஷேஷன்) மூலம் ஊழல் மோசடிகளைக் குறைக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தச் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை (19.09.2025)

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் Read More »

அபிவிருத்தி என்பது தனியே பௌதீக முன்னேற்றம் மாத்திரம் அல்ல. மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடைவதேயாகும். – ஆளுநர்

கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைக்கப்படுவதன் ஊடாக இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவது மாத்திரமல்ல இந்தப் பகுதியுமே அழகாக மாறவுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த இந்த அரசாங்கத்தையும் கௌரவ அமைச்சர் சந்திரசேகர் அவர்களையும் பாராட்டுகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கொழும்புத்துறை இறங்குதுறை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்புத்துறை இறங்குதுறையில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025)

அபிவிருத்தி என்பது தனியே பௌதீக முன்னேற்றம் மாத்திரம் அல்ல. மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடைவதேயாகும். – ஆளுநர் Read More »

காரைநகர் சீநோர் படகுத்தளத்தினை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும். – ஆளுநர்

வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் நிச்சயம் இது நடக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு காரைநகர் சீநோர் படகுத்தளத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025) இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரும்

காரைநகர் சீநோர் படகுத்தளத்தினை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும். – ஆளுநர் Read More »

யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டம் நடைபெற்றது.

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (18.09.2025) நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறானதொரு தனியான

யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டம் நடைபெற்றது. Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 17.09.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி கி.சுதர்சினி தலைமையில் கோணாவில் பிரதேசத்தில் மயில்வாகணம் விமலரத்தினம் எனும் விவசாயியின் வயல் துண்டத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் சிறுதானிய செய்கையினை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு Read More »

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை

உதைபந்தாட்டத்தில் 4வது தடவையாகவும் சம்பியன் கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை 8 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களைத் கைப்பற்றியது.! இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் காலி தடல்ல விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் 29,30, 31 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண வீர வீராங்கனைகள் 8 தங்கம் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை Read More »

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (17.09.2025) நடைபெற்றது. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவை இயக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மருத்துவமனையின் பணிப்பாளரை பாராட்டுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவரைப்போன்று ஏனைய மருத்துவமனைப் பணிப்பாளர்களும் செயற்பட முன்வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத்

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கான ஆசிரிய ஆளணி மேலதிகம் என்று தரவுகளில் குறிப்பிடப்படுகின்றது. அப்படியானால் அந்தப் பாடங்களுக்கு வடக்கிலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் வெற்றிடம் இருக்கக் கூடாது. நடைமுறையில் அவ்வாறான நிலைமை இல்லை. இந்த ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின்

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் – ஆளுநர் Read More »