March 2024

விவசாய டிஜிட்டல்வலையமைப்புக்குள் ஒன்றிணையவும் – FARMTO GATE இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்  வழிகாட்டுதல்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட FARM TO GATE இணைய செயலியை,  கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கான இணைய வழி சந்தை வாய்ப்புகளுக்கு வசதியளிக்கும் வகையில் FARM TO GATE இணைய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வாழ்க்கையில் புத்துயிர் ஊட்டக்கூடிய ஒரு […]

விவசாய டிஜிட்டல்வலையமைப்புக்குள் ஒன்றிணையவும் – FARMTO GATE இணைய செயலி அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்கள் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234.83 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன. கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பலாலி ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது குறித்த காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவித்து, அதற்கான ஆவணத்தை யாழ்ப்பாணம் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கையளித்தார். இன்று விடுவிக்கப்பட்ட காணிகளை ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த முடியும். அதற்கமைய விவசாயிகளுக்கு தேவையான விதை பொருட்களும் கௌரவ ஜனாதிபதியால்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு Read More »

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர்  (Andrew Traveller), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து  துணை உயர்ஸ்தானிகர் கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் தெரிவிப்பு Read More »

சிரமதான நிகழ்வு மாவட்ட சித்த மருத்துவமனை – மன்னார்

மன்னார் சித்த மருத்துவமனையின் வருடாந்த சிரமதான நிகழ்வின் ஒரு பகுதியாக 2024.03.06ந் திகதி மன்னார் மாவட்ட சிறுநாவுக்குளத்திலுள்ள கெமுனு வோட்ச் இன் 10ம் படையணி வீரர்களும் மருந்துவமனை ஊழியர்களும் இணைந்து சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டனர். வைத்தியசாலை சுற்று சூழலினை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பேணும் வகையில் இச் சிரமதானமானது படையணி வீரர்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இச்சிரமதானத்தில் மருத்துவமனை சுற்றுப்பறச் சூழலானது பூரணமாக சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலில் நடப்பட்டிருந்த மருத்துவ தாவரங்களிற்கு உரிய பாதுகாப்பு

சிரமதான நிகழ்வு மாவட்ட சித்த மருத்துவமனை – மன்னார் Read More »

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று  (19.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு Read More »

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் 2023/24 காலபோகத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி (CRIWMP) திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் பரசூட் முறையை ஊக்கவிக்கும் முகமாக 20 ஏக்கர்களில் பரசூட் முறை மூலம் நடுகை செய்யப்பட்டது. அதற்கமைவாக ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் இசங்கன்குளம் பகுதியில் விவசாய போதனாசிரியர் செல்வி ஞா. கஜகர்ணியின் ஆலோசனைகளுக்கு அமைவாக திரு க.வேதநாயகம் எனும் விவசாயி குறித்த முறைமூலம் நெற்செய்கை மேற்கொண்டிருந்தார். மேற்படி நெற்செய்கையின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள்

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே கௌரவ ஆளுநர் இவ்விடயத்தை குறிப்பிட்டார். போலியோ தடுப்பு மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டசிறந்த சேவைகளை ரோட்டரி கழகம் முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.– வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய  செயல்திட்டத்தின் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அவர்கள் கலந்து சிறப்பித்தார். கனேடிய உலக பல்கலைக்கழக சேவை (WUSC)அமைப்பானது  GRIT  எனும் புதிய  செயல்திட்டத்தை ( Growth, Resilience,  Investment and training ) வளர்ச்சி, மீண்டெழும்தன்மை,  முதலீடு மற்றும் பயிற்சி ஆகிவற்றை நோக்கமாக கொண்டு ஆரம்பித்துள்ளது.  GRIT  செயல்திட்டமானது  வட மாகாணத்திலுள்ள பெண் தொழில்முனைவோருக்கான,

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. Read More »

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் பதவியேற்றார்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 15 மாச் 2024 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை வளாகத்திலுள்ள அலுவலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் பதவியேற்றார் Read More »

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளும் தேவைப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார். சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளதால் அதனை

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு Read More »