March 2019

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர்

மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக நாம் பணிபுரிய வேண்டும். நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம் வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வட மாகாண இளைஞர்,யுவதிகளின் தொழிற்கல்வியினை மேட்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மாணவர் மற்றும் இளைஞர் யுவதிகளின் உயர்கல்வி,தொழிற்கல்வி தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கையேட்டினை வெளியிடும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் 28 பெப்பிரவரி 2019 […]

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு ஆளுநர் திடீர் கண்காணிப்பு விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 27 பெப்பிரவரி 2019 அன்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு ஆளுநர் திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும் – ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று (25) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர் அவர்கள், கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார். அத்தோடு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும்   மருந்தகங்களின் உரிமம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் மருந்தாளர்கள்(Pharmacist) கட்டாயம் கடமையில் இருக்கவேண்டும்

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும் – ஆளுநர் உத்தரவு Read More »

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 26 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் பொலிஸ் சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும்  குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அத்துடன் வடமாகாணத்தில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம்

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு Read More »

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை

வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். காணிப் பிரச்சினைகளில் முதன்மையானதாக காணிகளை அளவிடுதல் காணப்படுவதால் காணிகளை அளவிட நில அளவையாளர் திணைக்களத்தில் போதிய ஆளணியினர் இல்லாமையின் காரணமாகவே ஓய்வுபெவுற்ற நில அளவையாளர்களின் சேவையினை பெற்றுக்கொள்ளும் முகமாகவே ஆளுநர் அவர்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை வட மாகாண காணி நிர்வாக திணைக்களத்தில் தம்மை பதிவு

ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை Read More »

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும்பயிற்சிப்பட்டறையும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 16.02.2019 தொடக்கம் 17.02.2019 வரை நடைபெற்றது. யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் இந்திய துணைத்தூதரகத்தின்அனுசரனையுடன் வடமாகாண தொழிற்துறைத்திணைக்களத்தின் இணை அனுசரனையுடனும் வடமாகாணகல்வி அமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவுடன் இணைந்துயாழ்ப்பாணத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்காகவும் இந்தியாவில் இருந்து இயந்திர உபகரணங்கள் மற்றும்17 தொழில் துறை சார்ந்த கைத்தொழில் உற்பத்தியாளர்களை வரவழைத்து வடமாகாணத்திலுள்ள450 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களிற்கு 02 நாட்களிற்கு சிறந்த முறையில்பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டதுடன் சிறந்த முறையில் பயிற்சியை நிறைவுசெய்தவர்களிற்கானசான்றிதழ்களும்  பயிற்சி நிறைவில் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சங்கர்பாலசந்திரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபைமுதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர்- நிர்வாகம் திருமதிசரஸ்வதி மோகநாதன், பதில் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம் திருமதிவனஐா செல்வரத்தினம் மற்றும் யாழ் றோட்டறிக் கழகத் தலைவர் சு.டீ.பிரசாந்தன் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். இப்  பயிற்சிப்பட்டறையில் உள்ளடக்கப்பட்ட தொழிற்துறைகளாவன. இயந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்கும் முறை. இயந்திரம் மூலம் கோழி உரிக்கும் முறை. இயந்திரம் மூலம் மரவள்ளி கிழங்கு சீவும் முறை. இயந்திரம் மூலம் வாழைக்காய் சீவும் முறை. இயந்திரம் மூலம் தேங்காய்ப் பூ திருவும் முறை. இலகுவில் மரம் ஏறும் முறை. இயந்திரம் மூலம் வாழை மடலை வாழை நாராக்கும்  முறை. இயந்திரம் மூலம் மோட்டார் வாகன சுத்திகரிப்பு முறை. கடதாசிப் பை தயாரிக்கும் முறை. இயந்திர செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் முறை. இயந்திரம் மூலம் சிறியளவான தானியங்கள் அரைக்கும் முறை.

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் Read More »