வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அடப்பன் வீதி. மடத்தடி. யாழ்பாணம் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ம் திகதி காலை 9.15 மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் தலைமையில் ஆரம்பமானது.

இவ் வைபவத்திற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களுடன், செயலாளர், பேரவை செயலகம் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி.அஞ்சலி சாந்தசீலன் அவர்களுடன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் திரு.வீ.பிறேமகுமார், மகளிர் விவகார அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. எஸ்.விஸ்ணுகுமார்,  நீர்பாசன திணைக்கள யாழ்மாவட்டப்பிரிவு பொறியியலாளர் திரு.எஸ்.சர்வராஐh மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும்; கலந்து வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டப்பட்டு திணைக்களத்தின் கட்டுமாணப்பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.