ILO LEED+ செயற்திட்டத்தின் கீழ் தொழிற்துறைத் திணைக்களத்தினால் உங்கள் தொழிலை ஆரம்பித்தல் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு உங்கள் தொழிலை ஆரம்பித்தல் (SYB) பயிற்சி நெறியானது 13.02.2024 தொடக்கம் 16.02.2024 வரை 4 நாட்கள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இரத்தினசபாபதி கௌசிகன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.தில்லையம்பலம் திவாகரன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர்.

இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் தாம் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்த தொழில் முயற்சியினை தொடங்குகின்ற போது பின்பற்ற வேண்டிய அனைத்து விடையங்களும் தெளிவு படுத்தப்பட்டதுடன் தொழிலை தொடர்ந்து நடாத்திச்செல்லுகின்ற போது எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்களை நடைமுறை ரீதியாக தெளிவுபடுத்துவதற்காக வியாபார விளையாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டது. இறுதியாக தொழிலை ஆரம்பித்து தொடர்ந்து நடாத்துவதற்கான விடையங்களை உள்ளடக்கிய தொழிற்திட்டம் ஒன்றினை தயாரித்து அத்தொழிலினை ஆரம்பிப்பதற்கான தயார்ப்படுத்தலுடன் இப் பயிற்சி நெறியானது நிறைவு பெற்றது.