விவசாய அமைச்சு

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா கடந்த 17.11.2022 ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடைபெற்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய் பகுதியிலும் கிளிநெச்சி மாவட்டத்தில் இரணைமடு இடது கரை பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ9 மாங்குளம் வீதியின் இரு ம ருங்கிலும் வவுனியா மாவட்டத்தில் தாண்டிக் குளம் அரசு விதை உற்பத்தி பண்ணைப்பகுதியிலும் மன்னர் மாவட்டத்தில் […]

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா Read More »

மஞ்சள் அறுவடையும் பதப்படுத்தலும் வயல் விழா

மஞ்சள் அறுவடை மற்றும் பதப்படுத்தல் வயல் விழா 25.02.2022 புதன் கிழமை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.அ.சிவபாலசுந்தரன், செயலாளர், விவசாய அமைச்சு, வடமாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. சி.சிவகுமார் மாகாண விவசாயப் பணிப்பாளர் வட மாகணம், அவர்களும்  அத்துடன் துறைசார் அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மஞ்சள் செய்கையாளர்கள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும்

மஞ்சள் அறுவடையும் பதப்படுத்தலும் வயல் விழா Read More »

விவசாயத் திணைக்களமும் கிராமிய அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் செயற்றிட்டம்

யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டம் பற்றிய கலந்துரையாடல்  திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் 03.06.2022 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திரு.சி.சிவகுமார், மாகாண விவசாயப் பணிப்பாளர், வடமாகாணம் திரு.ரா.சசீலன், மாகாணப் பணிப்பாளர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், திரு.என்.பஞ்சலிங்கம், யாழ் மவாட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பாட விதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும்

விவசாயத் திணைக்களமும் கிராமிய அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெரிய அளவினலான பல்வகைமை வீட்டுத்தோட்டத்தினை உருவாக்கும் செயற்றிட்டம் Read More »

சேதனப் பசளை உற்பத்தித் திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் மற்றும் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தூளாக்கும் இயந்திரத்தின் சேவை

சேதனப் பசளை மற்றும் சேதனப் பீடைநாசினி உற்பத்தித் திட்டத்தின் கீழ் தாவரப் பாகங்களைத் தூளாக்கும் 175 தூளாக்கும் இயந்திரங்கள்(Multi Chopper) ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சேதனப் பசளை உற்பத்தியாளர்கள், இளம் விவசாயிகள் கழகங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், பிரதேச சபைகள், கமக்கார அமைப்புக்கள், விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்கள் மற்றும் பண்ணைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தூளாக்கும் இயந்திரங்களின் தேவைப்பாடு இருப்பின் தங்களுக்கு அண்மித்த பகுதியில் உள்ள நிலையம் / தனிப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களுக்குரிய

சேதனப் பசளை உற்பத்தித் திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் மற்றும் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட தூளாக்கும் இயந்திரத்தின் சேவை Read More »

மாற்றமடையக் கூடிய காலநிலைக்கு ஏற்ப செங்குத்து பயிர்ச் செய்கை முறைமையில் அரை நகர்ப்புறங்களில் முன்மாதிரி வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல்

14.02.2022 ஆம் திகதி அன்று யாழ் மாவட்ட  விவசாயப் பயிற்சி நிலையத்தில் அரை நகர்ப்புற வீட்டுத் தோட்டம் பற்றிய கலந்துரையாடல் விவசாயப் பணிப்பாளர் நாயகம் டாக்டர்.எஸ்.எச்.எஸ்.அஜந்த டிசில்வா, தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கே.எச்.எம்.எஸ் பிரேமலால், முன்னாள் பணிப்பாளர் நாயகம் வளிமண்டலவியல், டாக்டர் பி.வி.ஆர். புண்யவர்தன முன்னாள் விவசாய-காலநிலை நிபுணர், இன்ஜி. என். குமாரசிங்க – முன்னாள் தலைமை பொறியியலாளர், வானிமண்டலவியல், ஆர்.டி. சிறிபால – முன்னாள் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், மற்றும்  யாழ் மாவட்ட பிரதி

மாற்றமடையக் கூடிய காலநிலைக்கு ஏற்ப செங்குத்து பயிர்ச் செய்கை முறைமையில் அரை நகர்ப்புறங்களில் முன்மாதிரி வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல்

அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு எனும் செயற்றிட்டத்திற்கமைவாக இரசாயன மற்ற உணவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சேதன பசளை உற்பத்தி திட்டத்தின் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வானது 21.01.2022 அன்று  மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல் Read More »

வவுனியா மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல்.

வவுனியா மாவட்டத்தில் சேதனப் பசளை மற்றும் சேதனப் பீடைநாசினி உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 27.01.2022 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. மு. திலீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு. ளு. சிவகுமார், மாகாண விவசாயப்

வவுனியா மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல். Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம்

வடமாகாண விவசாயத்;திணைக்கள ஏற்பாட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை விவசாயிகளிடையே அதிகரிக்கும் நோக்குடனான விழிப்புணர்வுச் செயற்பாடானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின்  தலைமையில் கிளிநொச்சி பொருளாதாரச்சந்தையில் 15.09.2021 அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது. விவசாய உற்பத்தியில் இரசாயன பாவனை அதிகரிப்பதன் காரணமாக   விவசாய விளைபொருட்கள் நச்சுதன்மையுள்ளதாகவும், தரமற்றதுமாகவும் காணப்படுகின்றது. இதன்காரணமாக மனித உடலில் பல்வேறு வகையான நோய்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றமை யாவரும் அறிந்த ஓரு விடயமே. எதிர்கால சந்ததிக்கு நஞ்சற்றதும் தரமானதுமான விவசாய

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம் Read More »

வடக்குமாகாண பொதுச்சேவைக்குட்பட்ட விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்கான புதிய நியமனங்கள்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழான விவசாயப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு எட்டு (8) உத்தியோகத்தர்களுக்கும்> வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழான கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு இரண்டு உத்தியோகத்தர்களுக்குமான நியமனங்கள் 15.06.2021 ஆம் திகதி வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. அ.சிவபாலசுந்தரன் வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன் ஆகியோர் கலந்து

வடக்குமாகாண பொதுச்சேவைக்குட்பட்ட விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் III இற்கான புதிய நியமனங்கள் Read More »

வட மாகாண விவசாய திணைக்களத்தின் நடமாடும் சேவை

வட மாகாண விவசாய திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தால் 04.06.2021 ஆம் திகதி தொல்புரம் விவசாய போதனாசிரியர் பிரிவில் விவசாயிகளிற்கான விதை, நடுகைப் பொருட்கள் விவசாய நடமாடும் சேவை முலம் விற்பனை செய்ப்பட்டது. இந் நடமாடும் சேவையில் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி. நடனமலர் விஐயன், பாடவிதான உத்தியோகத்தர் திரு. ந.நிரஞ்சன்குமார் மற்றும் தொல்புரம் விவசாய போதனாசிரியர் திரு.க.நிரோஐன் ஆகியோர்

வட மாகாண விவசாய திணைக்களத்தின் நடமாடும் சேவை Read More »