விவசாய அமைச்சு

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம்

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் காலை 5 மணி முதல் 7.30 மணிவரை வவுனியா பொதுச்சந்தை முன்றலில் 01.03.2024 தொடக்கம் நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் நடைபெற்று வருகின்றது. இக் கருத்துருவானது CABI என அழைக்கப்படும் “Center for Agriculture & Bio Science International ” நிறுவனத்தினால் இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முன்னோடித் திட்டமாக சில தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது வெற்றியளிக்கப்பட்டிருந்ததன் விளைவாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் பயிர்ச்சிகிச்சை முகாமாகவும், நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாமாகவும் […]

நிரந்தர பயிர்ச்சிகிச்சை முகாம் – வவுனியா மாவட்டம் Read More »

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் 2023/24 காலபோகத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி (CRIWMP) திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் பரசூட் முறையை ஊக்கவிக்கும் முகமாக 20 ஏக்கர்களில் பரசூட் முறை மூலம் நடுகை செய்யப்பட்டது. அதற்கமைவாக ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் இசங்கன்குளம் பகுதியில் விவசாய போதனாசிரியர் செல்வி ஞா. கஜகர்ணியின் ஆலோசனைகளுக்கு அமைவாக திரு க.வேதநாயகம் எனும் விவசாயி குறித்த முறைமூலம் நெற்செய்கை மேற்கொண்டிருந்தார். மேற்படி நெற்செய்கையின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள்

பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 100 பயனாளிகளை உள்ளடக்கியதாக வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்டமானது 5 கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கென பயனாளி ஒருவருக்கு 100 பொலித்தீன் பைகளும், தாங்கியுடன் கூடிய சிறிய அளவிலான சொட்டு நீர்ப்பாசனத் தொகுதியும் காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தினூடாக (CRIWM) உள்ளீடுகளாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் வயல் விழா நிகழ்வானது கலசியம்பலாவ கிராமத்தில் 08.02.2024 அன்று பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின்

வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு Read More »

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெல் விதைப்பானது பெரும் போகம் 2023/24 இல் 32 ஏக்கர் நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கான வயல் விழா நிகழ்வானது 08.02.2024 அன்று கலசியம்பலாவ கிராமத்தில் வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி. யு. சரத்சந்திர அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. மரியதாசன் ஜெகூ, மாகாண

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 நிகழ்வு சர்வதேச மண் தினமான 05.12.2023 செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற மண்தின நிகழ்வின்போது விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவு முன்னெடுத்த சர்வதேச மண் தினம் – 2023 Read More »

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி

‘சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி’ எனும் தொனிப்பொருளிலான வயல்விழா நிகழ்வு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சியில் 05.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் வெகு விமர்சியாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ,

வயல் விழா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின சோளம் (MI Maize Hybrid 04) விதை உற்பத்தி அறுவடை வயல் விழா 04.10.2023 அன்று புலவனானூர், பூவரசன்குளம் கிராமத்தில் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் வவுனியா மாவட்ட நவீன மறுவயற்பயிர் விதை உற்பத்தியாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஊடுகளைகட்டும்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா Read More »

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு

தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கிய நிலைபேறான விவசாயம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வானது 26.07.2023 அன்று வவுனியா மாவட்ட பிரதி மாகண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இவ் வயல் விழா நிகழ்வில் விவசாயம் சார்ந்த நவீன பயிர்ச்செய்கைத் தொழில்நுட்பங்கள், சிறந்த விவசாய நடைமுறைகள், தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், சேதன விவசாயத் தொழில்நுட்பங்கள், சேதனப் பசளைகள் மற்றும் பீடை நாசினிகளின் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத்

வவுனியா மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வயல் விழா நிகழ்வு Read More »

சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023

சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு எமது பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தி எமது உள்ளுர் விவசாயப பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உலக தரிசன நிறுவன நிதி அனுசரணையுடன் சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் 2023.06.15 வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம்இ திருநெல்வேலியில் திருமதி. அ.சிறிரங்கன் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்இ யாழ்ப்பாணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி

சிறுதானிய உணவு ஊக்குவிப்பு நாள் – 2023 Read More »

ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணை – வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு தேராவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணையில்; பெரிய அளவிலான பல்வகைமை வீட்டுத்தோட்டம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் தலைமையில் 19.04.2023 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் எம்.சர்மினி, மாகாண

ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணை – வயல் விழா Read More »