விவசாய அமைச்சு

வவுனியா மாவட்டத்தில் PSDG நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விதை நெல் உற்பத்தி

வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் சிறுபோகம் 2025 இல் Pளுனுபு நிகழ்ச்சித்திட்டத்தில் பாவற்குளம் பெரிய நீர்ப்பாசனக் குளத்தின் கீழ் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென 50 விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டு பயனாளி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு 3 புசல் வீதம், மானிய அடிப்படையில் விதை நெல் வழங்கப்பட்டிருந்தது. தற்போது பயிரானது 1 ½ மாத வளர்ச்சிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் எதுவித நோய், பீடைத் தாக்கங்களற்றுக் காணப்படுகின்றது. இதில் விவசாயி ஒருவர் முன்னோடியாக […]

வவுனியா மாவட்டத்தில் PSDG நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விதை நெல் உற்பத்தி Read More »

பயிர்மாற்றீட்டு செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து அறுவடை விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதிப்பங்களிப்பின் கீழ் வயல் நிலங்களில் அவரையினப் பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோம்பாவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பயிர்மாற்றீட்டுச் செய்கையின் உழுந்து அறுவடை வயல் விழா நிகழ்வானது கரியல் வயல் என்னும் இடத்தில் 27.05.2025ம் திகதி காலை 9.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் செல்வி கெ. மதுர்சிகா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி

பயிர்மாற்றீட்டு செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து அறுவடை விழா Read More »

உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வு

தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. ‘‘நம் அனைவரையும் வளர்க்க இயற்கையால் ஈர்க்கப்பட்ட தேனீ” எனும் கருப்பொருளினை மையமாக கொண்டு 2025 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் (CSIAP) அனுசரணையுடன் புதுக்குடியிருப்பு மந்துவில் விவசாய போதனாசிரியர் பிரிவின் தொழில்நுட்ப

உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வு Read More »

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 29.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் சி.மதன் என்பவரின் களத்தில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.T.துர்க்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை களத்தை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.ளு.விஜயதாசன் அவர்கள்

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் ஒட்டுண்ணி விடுவிப்பு

அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodics cocois) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. வெண் ஈயானது தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் சிறிய பூச்சி ஆகும். இது இலைகளின் சாறு உறிஞ்சுவதன் மூலம் மர வளர்ச்சி, தேங்காய் உற்பத்தியை பாதிக்கும் மற்றும் வைரஸ் நோய்களை பரப்பும். இதன் பாதிப்பு அறிகுறிகளாக இலைகளின் அடிப்பக்கத்தில் வெண் ஈக்கள் கூட்டமாக காணப்படுதல், இலைகள் மஞ்சளாக மாறுதல், ,உலர்தல், தென்னை மர

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் ஒட்டுண்ணி விடுவிப்பு Read More »

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளத்தைச் சேர்ந்த விவசாயியான திரு. ஆ. தேவராசா அவர்களின் வயலில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழாவானது 11.04.2025 அன்று வவுனியா மாவட்டச் செயலாளர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர், அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். பரசூட் முறையிலான நெற் செய்கையில் விவசாயிகள் அதிக விளைச்சலைப்

வவுனியா மாவட்டத்தில் பரசூட் முறையிலான நெற் செய்கை தொடக்க விழா நிகழ்வு Read More »

முன்மாதிரித்துண்ட மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிருஸ்ணபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வானது 11.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் க.செல்வரத்தினம் என்பவரின் களத்தில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.P.ஷிவனியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி, பீடைகளைக்கட்டுப்படுத்திய களத்தை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.S.விஜயதாசன் அவர்கள்

முன்மாதிரித்துண்ட மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

முன்மாதிரித்துண்ட பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள குமரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் MIMB-07 இன முன்மாதிரித்துண்ட பாசிப்பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 08.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் மு.வேலாயுதபிள்ளை என்பவரின் களத்தில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.ஆ.அனோயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் MIMB -07 இன முன்மாதிரித்துண்ட பாசிப்பயறுச் செய்கையினை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்

முன்மாதிரித்துண்ட பயறுச் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல்

விவசாயத் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முலம் உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் (PSDG) கீழ் இஞ்சி செய்கையினை விரிவுபடுத்தும் நோக்குடன் கடந்த 04.04.2025 ஆம் திகதியன்று இஞ்சி விதை கிழங்கு விநியோகம் வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் தெரிவுசெய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு, பயனாளி ஒருவருக்கு 10 கிலோ வீதம் இலவசமாக விதை கிழங்குகள் வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடனும்

விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல் Read More »

இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா

 மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தரசன்குளம் எனும் பிரதேசத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழான இயந்திர நாற்று நடுகை முறை மூலமான நெல் அறுவடை வயல் விழாவானது  01.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.து.மேர்வின் றொசான் றோச் அவர்களும்

இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா Read More »