விவசாய அமைச்சு

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழாவானது வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவிலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணையில் 2024.07.03 ஆம் திகதி காலை 9.30 மணியக்கு பண்ணை முகாமையாளர் தங்கராஜா – கமலதீபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி செந்தில்குமரன் சுகந்தினி கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் […]

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை பருவ இதழின் 02 ஆவது இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அறுவடை பருவ இதழின் வெளியீட்டு நிகழ்வு, 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில், விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின நிகழ்வின்போது நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ அவர்கள் தலைமையில் நடைபெற்ற “அறுவடை” பருவ இதழ் 02 வெளியியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் “அறுவடை – 02 ” பருவ இதழ் வெளியீடு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் பிரிவினால் சுற்றுச்சூழல் தின நிகழ்வு 20.06.2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.மரியதாசன் ஜெகூ தலைமையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிகழ்வில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, அறுவடை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு ஆகியன இடம்பெற்றதோடு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நாடகப்போட்டியில்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றுச்சூழல் தின நிகழ்வு Read More »

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து சேவைகளையும் தமது பிரதேசங்களிலேயே நடமாடும் சேவையின் மூலம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வானது சித்திரை மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மானுச நானயக்கார மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமாரஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச

“ஜெயகமு ஸ்ரீ லங்கா” நடமாடும் சேவை – மன்னார் மாவட்டம் Read More »

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு

அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodicus disperse) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. இவ் வெண் ஈக்களின் தாக்கத்தை முகாமைத்துவம் செய்யும் முகமாக வெண் ஈக்களைத் தாக்கும் ஒட்டுண்ணி (Encarsia gaudulapae) விவசாயத் திணைக்களத்தினால் வடமாகாண தென்னம் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 15.04.2024 ஆம் திகதியன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமனன்குளம் விவசாயப்

தென்னையை தாக்கும் வெண் ஈக்களை முகாமைத்துவம் செய்யும் முகமாக வவுனியாவில் ஒட்டுண்ணி விடுவிப்பு Read More »

வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா

கிளிநொச்சி மாவட்ட அன்புபுர வீதி, முழங்காவில் பகுதியில் உள்ள திரு.தம்பிப்பிள்ளை சேகர் அவர்களுடைய GAP Certified விவசாயப்பண்ணையில் ‘வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வானது 03.04.2024 அன்று காலை 9.30 மணியளவில், திரு.மகானந்தன் மகிழன் (விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சுகந்தினி செந்தில்குமரன் (விவசாயப்பணிப்பாளர், வடக்கு மாகாணம்.) கலந்து கொண்டதுடன், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி. ஜெகதீஸ்வரி சூரியகுமார், திருமதி. லோகா பிரதீபன்(சிரேஸ்ட விரிவுரையாளர்), கிளிநொச்சி

வர்த்தக ரீதியிலான செவ்வாழைச்செய்கை என்னும் கருப்பொருளிலான வயல் விழா Read More »

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிய திட்டத்தின் ஊடாக 2023 ஆம்  ஆண்டு வழங்கப்பட்ட மஞ்சள் விதை கிழங்குகளை பெற்றுக்கொண்ட பெரியமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் பெரியமடு கிழக்கு கிராமத்தில் உள்ள விவசாயி திரு. யு. ஆ. சியான் மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திரு. ஊ. பசீலன் அவர்களின் விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டிருந்தார். 7 மாதங்களின் பின்னர் அறுவடைக்கு தயாரான நிலையில் மேற்படி  மஞ்சள் செய்கையின் பலாபலன்களை ஏனைய விவசாயிகளிற்கும்

மஞ்சள் செய்கை வயல் விழா மற்றும் பயிர் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டம் Read More »

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா

யாழ் மாவட்டத்தில் பெரும்போகம் 2023/2024 இல் உருளைக்கிழங்கு செய்கையில் உள்ளுர் விதை கிழங்கினை நடுகைக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளை கண்டறிவதற்காக மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 732 kg ரெட் லசோடா உள்ளுர் விதை கிழங்கு சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் , நீர்வேலி , உரும்பிராய், புத்தூர், ஆவரங்கால் , அச்சுவேலி மற்றும் வசாவிளான் விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் முன்மாதிரி துண்டமாகச் செய்கை பண்ணப்பட்டது. இவ்விதை உருளைக்கிழங்கானது சீதா எலிய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இழைய வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இழைய

Red Lasoda உள்ளுர் இன உருளைக்கிழங்கு முன்மாதிரி துண்ட வயல்விழா Read More »

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்டத்தில் எள்ளு செய்கையை முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 67 பயனாளிகளிற்கு 1/2 ஏக்கர் வீதம் ANKSE-4 வர்க்க எள்ளு விதைகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் வஞ்சியன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் கள்ளியடிப்பிட்டி கிராமத்தில் திரு. மயில்கண்ணன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு 1.5 கிலோ கிராம் எள்ளு விதைகள் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி து. ஆ. ஸ்ரெல்லா விவசாய ஆலோசனைகளிற்கு அமைவாக எள்ளு

CRIWMP திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட எள்ளு செய்கை வயல் விழா – மன்னார் மாவட்டம் Read More »

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் மத்திய விவசாயத் திணைக்கள நிதி உதவியுடன் மாகாண விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் மாவட்ட ரீதியில் செத்தல் மிளகாய் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 240 பயனாளிகளிற்கு 0.25 ஏக்கர் வீதம் MICH Hy-1 வர்க்க மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் கொண்டச்சி விவசாய போதனாசிரியர் பிரிவில் திரு. ந. நலீன் எனும் விவசாயி தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 கிராம் விதை மிளகாய் வழங்கப்பட்டு மேற்படி பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி டிவைனி பீரீஸின் விவசாய

செத்தல் மிளகாய் உற்பத்தி வயல் விழா- மன்னார் மாவட்டம் Read More »