விவசாய அமைச்சு

கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா

மன்னார் மாவட்டத்தின் அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் பிரிவில் அகத்திமுறிப்பு அளக்கட்டு கிராமத்தில் மேட்டு நிலங்களில் சோளப் பயிர்ச்செய்கை அறுவடை விழா திரு.ஆ.யு.ஆ. அம்ஜத் எனும் விவசாயியின் நிலத்தில் 03.07.2025 அன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் திருமதி.லோறன்சியா லியோன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன், பாடவிடய உத்தியோகத்தர்கள்,    விவசாய  போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். விவசாயப் போதனாசிரியர் கருத்து தெரிவிக்கையில் சோளச்செய்கை […]

கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா Read More »

நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியீட்டத்தின் (PSDG) கீழ் பயிரிடப்பட்ட பரசூட் முறையிலான நெற்செய்கையின் அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 02.07.2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இ.இளங்குமரன் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.கிருசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர்

நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு Read More »

வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா

மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தேத்தாவடி கிராமத்தில் வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல்விழா திரு.நா.கிருஸ்ணமூர்த்தி எனும் விவசாயியின் வயல்நிலத்தில் 01.07.2025 இன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் திருமதி. காயத்திரி கிசோபன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.ஜே.மேர்வின் றொசான் றோச் பாடவிடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப்

வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா Read More »

மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  உள்ள அம்பாள் நகர் கிராம சேவையாளர் பிரிவில். 27.06.2025 அன்று மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை ஊடாக மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு  தலா 0.5 Ac  விஸ்தீரணத்திற்கு ஏற்ப நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் போது நிலக்கடலை விளைசசல் அதிகரிப்பதற்கான விசேட பயிற்சி வகுப்பு நடாத்தப்பட்டு விதைகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில்  பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள்,

மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு – கிளிநொச்சி மாவட்டம் Read More »

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

யாழ் மாவட்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் – 2025 (PSDG) கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீட்டுத்தோட்ட பொதி வழங்கல் நிகழ்வு 26.06.2025 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய விரிவுரை மண்டபத்தில் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்தில் 3.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மாவட்ட ரீதியாக 403 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர் ஒரு பயனாளிக்கு வெண்டி, கீரை, பயிற்றை, பாகல், புடோல் விதைகளும்

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025 Read More »

வவுனியா மாவட்டத்தில் தேசிய களை நெல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட களைநெல் விழிப்புணர்வு நிகழ்வு

வயல் நிலங்களில் களை நெல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நாடளாவிய களை நெல் விழிப்புணர்வு வார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நமது வவுனியா மாவட்டத்தில் 27.06.2025, வெள்ளிக்கிழமையன்று விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று மடுக்கந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விவசாயிகள் நேரடியாக வயல் நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு களை நெல்லினை இனங்காண்பது, அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலங்களில் களை நெல்லின் பரவலைத் தடுப்பது தொடர்பான விளக்கங்கள், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும்

வவுனியா மாவட்டத்தில் தேசிய களை நெல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட களைநெல் விழிப்புணர்வு நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் பாத்தீனிய களை பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் தொடர்ச்சியாக சிரமதானம் மூலம் பாத்தீனியம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் 18.06.2025 அன்று கிருஸ்ணபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவின் தொண்டமாநகர் பகுதியில் சிரமதானமும் மக்களுக்கு விழிப்புணர்வும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் பாத்தீனியம் காணப்படும் பிரதேசங்களில் தொடர்ந்து சிரமதானம் மற்றும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு செயற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, பாடவிதான

கிளிநொச்சி மாவட்டத்தில் பாத்தீனிய களை பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு Read More »

வவுனியா மாவட்டத்தில் PSDG நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விதை நெல் உற்பத்தி

வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் சிறுபோகம் 2025 இல் Pளுனுபு நிகழ்ச்சித்திட்டத்தில் பாவற்குளம் பெரிய நீர்ப்பாசனக் குளத்தின் கீழ் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென 50 விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டு பயனாளி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு 3 புசல் வீதம், மானிய அடிப்படையில் விதை நெல் வழங்கப்பட்டிருந்தது. தற்போது பயிரானது 1 ½ மாத வளர்ச்சிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் எதுவித நோய், பீடைத் தாக்கங்களற்றுக் காணப்படுகின்றது. இதில் விவசாயி ஒருவர் முன்னோடியாக

வவுனியா மாவட்டத்தில் PSDG நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விதை நெல் உற்பத்தி Read More »

பயிர்மாற்றீட்டு செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து அறுவடை விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதிப்பங்களிப்பின் கீழ் வயல் நிலங்களில் அவரையினப் பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோம்பாவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பயிர்மாற்றீட்டுச் செய்கையின் உழுந்து அறுவடை வயல் விழா நிகழ்வானது கரியல் வயல் என்னும் இடத்தில் 27.05.2025ம் திகதி காலை 9.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் செல்வி கெ. மதுர்சிகா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி

பயிர்மாற்றீட்டு செய்கையில் மேற்கொள்ளப்பட்ட உழுந்து அறுவடை விழா Read More »

நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

சிறுபோகம் 2025 இல் வயல் நிலங்களில் பரவலாக களை நெல் இனங்காணப்பட்டதனை அடுத்து 23.06.2025 – 27.06.2025 ஆகிய தினங்கள் விவசாயத் திணைக்களத்தினால் களை நெல் கட்டுப்பாட்டு வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டம் வடக்கு மாகாணத்திலும் நடை பெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் புளியம்பொக்கணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான

நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு Read More »