மகளிர் விவகார அமைச்சு

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம்

சார்க் குழுமத்தின் பிரதிநிதிகள் 06.01.2023 அன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளை கௌரவ ஆளுநரின் வழிகாட்டலுக்கமைய சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற்திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்திருந்தனர். அங்கு நெசவுத் தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் அந்நிலையத்தில் வேலை செய்யும் பெண் நெசவுத் தொழிலாளர்களுடனும் தொழிற்துறை திணைக்காளத்தின் மாகாணப் பணிப்பாளருடனும் உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். மேலும் மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை […]

சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் யாழ் விஜயம் Read More »

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிறுப்பிட்டியில் அமைந்துள்ள வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கைத்தறி நெசவுப் பயிற்சி நிலையத்திற்கு 18 டிசெம்பர் 2022 அன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது நெசவாளர்களுடன் தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதுடன் நெசவாளர்களின் தயாரிப்புகளில் காணப்படும் அவர்களின் முயற்சியையும் பாராட்டினர். மேலும் நெசவுத் தயாரிப்புகளை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதன்போது மொத்த விற்பனையானது ரூபாய் 67,000.00 ஆகக் காணப்பட்டது.        

வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் கைத்தறி நெசவு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர் Read More »

ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம்

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கு விஜயம் செய்தனர். அங்கு நெசவுத்தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பாகவும் கலந்துரையாடினர். மேலும் மனிதவலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை பார்வையிட்டு தமது பாராட்டுகளையும்

ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம் Read More »

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக, யாழ் மாவட்டத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்யும் முகமாக தொழிற்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுடனான விற்பனை சந்தையானது யாழ்ப்பாணம் புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் 28.11.2022ஆம் திகதி நடைபெற்றது. மேற்படி விற்பனை சந்தையானது, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், அவர்களிடையே சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துவதை பிரதானமான நோக்கமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. இவ் விற்பனைச்சந்தை காலை 8.30 மணி ஆரம்பமாகி

புதிய பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விற்பனை சந்தை – 2022 Read More »

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022

தொழிற்துறைத் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட வடமாகாண கைத்தறி நெசவுப் போட்டியானது 18.10.2022ம் திகதி அன்று ஆசிரியர் பயிற்சிகூடம் நல்லூரில் நடாத்தப்பட்டது. பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நெசவு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களானது புடைவை கைத்தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடுவர் குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களால் வழங்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 31 வெற்றியாளர் பரிசில் வழங்குவதற்க்கு தகுதியானவர்களென தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 26.11.2022ம் திகதி யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து மிகச்

வருடாந்த நெசவுத் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வும் – 2022 Read More »

வர்த்தகச் சந்தை – 2022, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அவர்களின் உள்ளுர் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை நிகழ்வானது கௌரவ ஆளுநர் செயலக வளாகத்தில் 17.11.2022 அன்று நடைபெற்றது. இச்சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் 40 விற்பனை காட்சி கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கௌரவ ஆளுநர் – வட மாகாணம் மற்றும் செயலாளர் – மகளீர் விவகார அமைச்சு, வட

வர்த்தகச் சந்தை – 2022, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் Read More »

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவ காலத்தில் மேற்படி சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு 24.08.2022 தொடக்கம் 26.08.2022 வரை நடைபெற்றது. இதில் சுமார் 75 காட்சியறைகள் தொழிற்துறை திணைக்களத்தால் நிறுவப்பட்டு சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் திருமதி. ரூபிணி வரதலிங்கம், செயலாளர், மகளீர் விவகார அமைச்சு வடமாகாணம், திருமதி. வனஜா செல்வரட்ணம், வடமாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததுடன் அனைத்து விற்பனைக்

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது Read More »

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது

தொழிற்துறை திணைக்களம் வடமாகாணம் ILO நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தும் LEED+ செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக (Second Phase)  பயனாளிகளான சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை (MSME) சந்தைப்படுத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் வியாபார அபிவிருத்தி தொடர்பாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு இரண்டு கட்டமாக 20.07.2022 தொடக்கம் 22.07.2022 வரை மூன்று நாட்களும் மற்றும் 17.08.2022 தொடக்கம் 18.08.2022 வரை இரண்டு நாட்களும் Green Grass Hotel, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மேலும் முதலாம் பிரிவின்

தொழிற்துறை திணைக்களத்தினால் இரண்டாம் கட்டமாக வளவாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது Read More »

சர்வதேச மகளிர் தினம் 2022

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினமானது ‘நாடும், தேசமும், உலகமும், அவளே’ எனும் தொனிப்பொருளில்  2022.03.08 அன்று அமைச்சு அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. வட மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் அமைச்சின் திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெண்

சர்வதேச மகளிர் தினம் 2022 Read More »

இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும்

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வேப்பங்குளம் அம்பலாங்கொட மற்றும் வைரவப்புளியங்குளம் கைத்தறி நெசவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களிற்கு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்கள் 19 பெப்ரவரி 2022 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந் நிகழ்வின் போது மேற்படி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய நெசவு தறிகளினை (Hand loom) வேப்பங்குளம் கைத்தறி நெசவு நிலையம்

இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும் Read More »