மகளிர் விவகார அமைச்சு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் உடனடி அவசரப்பொதிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் பால்நிலை சார் வன்முறையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், பெண்கள் மற்றும் நலிவுற்ற கர்ப்பிணிகளுக்கு உடனடி அவசரப் பொதிகள் தேவையான நேரத்தில் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் எதிர்வரும் காலப்பகுதிக்கு மாவட்டச் செயலாளர்களின் கோரிக்கைக்கமைவாக கொள்வனவு செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்ட பொதிகள் அமைச்சின் […]

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் உடனடி அவசரப்பொதிகள் வழங்கி வைப்பு Read More »

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா– 2025

‘சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கிய சமூகங்களை உருவாக்குதல்’ எனும் தொனிப்பொருளில் மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா 12.12.2025ஆம் திகதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சரஸ்வதி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்ஷhந்தன் தலைமையில் ஆரம்பமாகியது. சிறப்பு விருந்தினர்களாக பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.முத்துலிங்கம் நந்தகோபாலன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக சட்டப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர்

சர்வதேச மாற்றுவலுவுடையோர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாகாண மட்ட மாற்றுவலுவுடையோர் தினவிழா– 2025 Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 18 ஒக்டோபர் 2025 அன்று அமைச்சு அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 17 ஒக்டோபர் 2025 அன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வானது அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது Read More »

அரசமுதியோர் இல்லத்தின் முதியோர் தின வார நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன

கைதடி அரச முதியோர் இல்லத்தின் முதியோர் தின வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 07 ஒக்டோபர் 2025 அன்று மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள்  அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபாலன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. திருமதி.தனுஜா லுக்சாந்தன் மாகாணப்பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம் அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்தி அதிதிகளை வரவேற்றார். இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி.மு.தனுஜா, பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக திரு.ச.சிவஸ்ரீ, விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணம்,

அரசமுதியோர் இல்லத்தின் முதியோர் தின வார நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன Read More »

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள்

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் திரு. நா.இராஜமனோகரன், அத்தியட்சகர், அரச முதியோர் இல்லம், கைதடி அவர்களின் தலைமையில் 02.10.2025 அன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. திருமதி. தனுஜா லுக்சாந்தன், மாகாணப் பணிப்பாளர், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ்நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.செ.பிரணவநாதன் (பிரதிப் பிரதம செயளாளர் – ஆளணியும் பயிற்சியும்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு அதிதிகளாக செல்வி.எம்.சிவகுமாரி (பிரதம உள்ளக கணக்காளர் வ.மா)

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் Read More »

அரச முதியோர் இல்லத்தில் முதியோர் தின வாரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது – 1ம் நாள் நிகழ்வுகள்

இந்த வருடத்திற்கான சர்வதேச முதியோர் தினமானது ‘மூத்தோர்கள் தங்கள் அபிலாஷகளை, தங்கள் நல்வாழ்வை, தங்கள் உரிமைகளை நோக்குமாறு உள்ளூரையும் உலகத்தையும் உந்துகின்றனர்’ எனும் ஐ.நா.வின் 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் கைதடி அரச முதியோர் இல்லத்தில் வழமை போன்று சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு ஒக்டோபர் 01 – 07 ஆந் திகதி வரை முதியோர் வாரமாக வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 01.10.2025 ஆம் திகதி புதன் கிழமை

அரச முதியோர் இல்லத்தில் முதியோர் தின வாரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது – 1ம் நாள் நிகழ்வுகள் Read More »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 29 செப்டெம்பர் 2025 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன்; அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டிற்குரிய மாற்றுத்திறன் வகைப்பாட்டை உறுதிப்படுத்திய மாற்றுத்திறனுடைய வீர வீராங்கனைகளுக்கான முதலாவது மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியானது துரையப்பா விளையாட்டரங்கில் 2025.09.10ஆம் திகதி மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நடாத்தப்பட்டது. ஆரம்ப நிகழ்வானது காலை 8.30 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. தனுஜா லுக்சாந்தன் தலைமையில் பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து

வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025 Read More »

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT)

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவத்தை அடைவதற்காக தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் திறன்களை வளர்ப்பதற்கான ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடானது முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் பாலின சமத்துவத்தை நிறுவனங்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திலும் உள்வாங்கிக் கொள்வதை உறுதிசெய்து பால்நிலைசார் பிரச்சனைகள், தலைமைத்துவம், வடமாகாணத்தில் பெண்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்,  சவால்கள், அது சார்ந்த வழிமுறைகளை உள்ளடக்கியதான  பயிற்சிப்பட்டறையின்

பெண்கள் வலுëட்டல் மற்றும் பாலின மையமயமாக்கல் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்றுனர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT) Read More »