பிரதம செயலாளர் அலுவலகம்

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் பதவியேற்றார்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 15 மாச் 2024 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை வளாகத்திலுள்ள அலுவலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய […]

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் பதவியேற்றார் Read More »

சர்வதேச மகளிர் தினம் -2024

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் ‘ அவளையும் உள்வாங்குங்கள் பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 06.03.2024 புதன்கிழமை அன்று சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், செயலாளர் திரு.பொ.வாகீசன், மகளிர் விவகார அமைச்சு மற்றும் மாகாண அமைச்சு செயலாளர்கள்,பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய

சர்வதேச மகளிர் தினம் -2024 Read More »

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024

இரண்டாவது கட்டத்திற்காக விண்ணப்பம் கோரல் அஸ்வெசும” நிகழ்நிலை விண்ணப்பம் – 2024 அஸ்வெசும” விண்ணப்பம் – 2024 மேலதிக விபரங்களுக்கு :   இங்கே கிளிக் செய்யவும்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 Read More »

தொழிற் சந்தை – 2024

வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகமும், யாழ்.மாவட்ட செயலகமும், இணைந்து சர்வோதயா, World Vision  நிறுவனங்களின் நிதியுதவியுடன் நடாத்தும் தொழிற்சந்தை, எதிர்வரும் 2024.02.20 மற்றும் 2024.02.21 ஆகிய திகதிகளில் மு.ப 9:00 முதல் பி.ப 4:30 வரை யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் (Jaffna Cultural Centre) இடம்பெறவிருக்கிறது.   அனைவரும் இந்நிகழ்விற்கு வருகைதந்து தொழிற்கல்விவாய்ப்பு, வேலைவாய்ப்பு,   சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பிற்கான வாய்ப்புக்களைப் பெற்று உங்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.   வடமாகாண பிரதம செயலாளர் செயலகமும்

தொழிற் சந்தை – 2024 Read More »

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024

2024 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள சுதந்திர தின நினைவு நாளுக்கு இணையாக 2024.02.01 ம் திகதியிலிருந்து 2024.02.07 திகதி வரை பத்து இலட்சம் மருத்துவச்செடிகள் ‘சுவதரனி மருத்துவ செய்கை வாரம்’ பெயரில் நாடு முழுவதும் நடுகை செய்யும் தேசிய மர நடுகை வேலைத்திட்டம் பிரதமர் அவர்களின் தலைமையில் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது மாகாண பிரதம செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்களின் ஒழுங்குபடுத்தலில், அனைத்து பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின்

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024 Read More »

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2024 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 01.01.2024 அன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பேரவைச் செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மாகாண இறைவரி திணைக்களம், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் வடக்கு மாகாண

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2024 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு Read More »

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2023

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் நிகழ்வானது 04.12.2023 திங்கட்கிழமை அன்று கொழும்பு BMICH இன் தாமரை மண்டபத்தில் இடம்பெற்றது. 2022 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பொதுநிர்வாக,

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2023 Read More »

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் 21.11.2023 அன்று தனது 93வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவையொற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இதயபூர்வமான அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம். மேலும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். பிரதம

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்களின் இரங்கல் செய்தி Read More »

மொழிக்கொள்கை அமுலாக்கம் மற்றும் மொழித்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு

அரசகரும மொழிக்கொள்கையை வடக்கு மாகாணசபை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் கூடிய செயலமர்வானது 14.11.2023 அன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், உதவிப்பிரதம செயலாளர் மற்றும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர், தேசிய மொழிப் பிரிவின் மாகாண அலுவலக பொறுப்பாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், சகல திணைக்களத்தின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பயிற்சியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் என

மொழிக்கொள்கை அமுலாக்கம் மற்றும் மொழித்திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வு Read More »

வடமாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான மரநடுகை நிகழ்வு – 2023

கார்த்திகை மாதமாகிய மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் ஒழுங்கமைப்பில் மரநடுகை நிகழ்வானது 09.11.2023 அன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணசபையின் உட்புறம் மற்றும் வெளிப்புற வளாகங்களில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர் உட்பட உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுகை செய்திருந்தார்கள். இம் மரநடுகை நிகழ்வில் வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சூழலில் நீண்டகாலம் பயன்தரக்கூடிய புங்கை மரங்களும் சவுக்கு மரங்களும்

வடமாகாண சபையின் கார்த்திகை மாதத்திற்கான மரநடுகை நிகழ்வு – 2023 Read More »