பிரதம செயலாளர் அலுவலகம்

உலக சுற்றாடல் தினம் – 2025 வடக்குமாகாண சபை வளாகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு எமது நாட்டில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜுன் மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் தலைமையில் பின்வரும் செயற்பாடுகள் வடக்கு மாகாணசபை வளாக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. மே 30      –  வளாக சிரமதானம் மே 31      –  அலுவலக […]

உலக சுற்றாடல் தினம் – 2025 வடக்குமாகாண சபை வளாகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 27 மே 2025 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், மாவட்ட செயலாளர் – யாழ்ப்பாணம், மாவட்ட செயலாளர் – மன்னார், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத்

வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார் Read More »

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) கைதடியில் உள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம் திருமதி. எ. அன்ரன் யோகநாயகம் ஏற்றி வைத்தார், வடக்கு மாகாணக் கொடியை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.பிரணவநாதன் ஏற்றி வைத்தார். நன்றியுரையை உதவிப் பிரதம செயலாளர் திருமதி எம்.டென்ஷியா வழங்கியிருந்தார். பிரதம செயலாளரின்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது Read More »

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் 01.01.2025 அன்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பேரவைச் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,  பணிப்பாளர் – கிராம அபிவிருத்தி திணைக்களம், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஆணையாளர் –

பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2025 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு Read More »

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024

இலங்கையின் பொதுநிதிக் கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 02.12.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு BMICH இன் B மண்டபத்தில் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகள் மற்றும் செயற்திறன் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும்

இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024 Read More »

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கான 4 வது காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதம செயலாளர் தலைமையில் 19.12.2024 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், தேசிய கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதம கணக்காளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாகாண உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மாகாண மட்ட கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் Read More »

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை தொடர்பாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு – 25.11.2024

வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள் தாழமுக்க நிலை காரணமாக வடக்கு மாகாணத்திலும் தீவிர மழை வீழ்ச்சி, வெள்ளப் பெருக்கு என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. எனவே மக்கள் பின்வரும் விடயங்களில் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் தேவையான அவசர உதவிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இயங்கும் அவசர இலக்கமான 0773377486 (த.ராஜேஸ்குமார்)  இற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக கொள்ளப்படுகின்றீர்கள். வெள்ளப்பெருக்கு வீடுகள் சேதமடைதல் மின்சார வடங்கள் பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் காணப்படல் பாரிய மரங்கள் முறிந்து போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காணப்படல்

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை தொடர்பாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு – 25.11.2024 Read More »

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம்

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் செப்ரெம்பர் மாதத்திலிருந்து நாடு முழுவதும் இரண்டாண்டு காலப்பகுதியில் ஆறு இடங்களுக்கு தனது பயணத்தை மேற்கொள்கின்றது அதன் ஜந்தாம் கட்டமாக மன்னார் நகர மண்டபத்தில் செப்ரெம்பர் 4 முதல் 11 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது அதுதொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 29.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார

பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியம் Read More »

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் எதிர்வரும் 04.08.2024 தொடக்கம் 10.08.2024 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நெடுவூர் திருவிழா காலத்தை சிறப்பாக நடாத்துவதற்கும் நெடுந்தீவின் அபிவிருத்தியினை முன்னெடுக்கும் பொருட்டான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 22.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பிலான அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களுடன் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும்

நெடுந்தீவின் அபிவிருத்திச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் Read More »

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறார்களின் ஆங்கிலம் தொடர்பிலான எழுத்தாற்றல் வாசிப்பு மற்றும் இதர திறமைகளை மேம்படுத்தும் நோக்கோடு PIMD Lotus நிறுவனத்தினரால் ‘சிறார்களிற்கான ஆங்கிலமொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு’ எனும் தலைப்பிலான செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 18.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் PIMD Lotus அரச சார்பற்ற நிறுவன தலைவர், ஒருங்கிணைப்பாளர், உதவிக் கல்விப்

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது Read More »