கல்வி அமைச்சு

வட மாகாண கல்வி அமைச்சின் நவராத்திரி விழா– 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம், கல்வித் திணைக்களத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பவற்றுடன் இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழா 2022.10.05 (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது. ஆலய வழிபாட்டோடு நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் திரு.மு.ராதாகிரு~;ணன் அவர்களால் […]

வட மாகாண கல்வி அமைச்சின் நவராத்திரி விழா– 2022 Read More »

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவகாலத்தையொட்டி ஆலய சூழலில் நடாத்தப்பட்ட விசேட கலை நிகழ்வு

நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவ காலத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட கலை நிகழ்வுகள் கடந்த 20.08.2022 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள மயிலூரான் அரங்கத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இ.வரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவகாலத்தையொட்டி ஆலய சூழலில் நடாத்தப்பட்ட விசேட கலை நிகழ்வு Read More »

ஆடி அமாவாசை நிகழ்வு -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் 28.07.2022 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆடி அமாவாசை நிகழ்வு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் வழிகாட்டலின் கீழ் ஏனைய குருமாரும் ஒன்றிணைந்து வன்முறையினால் இறந்த ஆத்மாக்களுக்கு  ஆத்மசாந்திவேண்டி  விசேட பூசை நிகழ்வு இடம்பெற்றது. அதன் பின்னர்

ஆடி அமாவாசை நிகழ்வு -2022 Read More »

வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ், சிங்கள கலைஞர்களின் கலாசார சங்கமம்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ்,சிங்கள கலைஞர்களை ஒன்றிணைத்து கலாசார சங்கமம் என்ற நிகழ்வானது 18.03.2022 (வெள்ளிக்கிழமை) காலை11 மணியளவில் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில்(மருதனார்மடம்) ஆரம்பமானது. முதல் நிகழ்வாக தெல்லிப்பளை மகாஜன கல்லூரியை சேர்ந்த மாணவர்களின் இன்னியம் மங்கல வாத்திய இசையுடன் விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் மாலை அணிவித்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ், சிங்கள கலைஞர்களின் கலாசார சங்கமம் Read More »

வட மாகாண மஹா சிவராத்திரி விழா – 2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் இந்து கலாசார திணைக்களம் ஆகியன ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையுடன் ஒன்றிணைந்து நடத்திய வடமாகாண மஹா சிவராத்திரி விழா 2022.03.01 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 7.00மணிக்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவானது வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு

வட மாகாண மஹா சிவராத்திரி விழா – 2022 Read More »

பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல்

கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் எனும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக கீழ்வரும் பாடல் தொகுப்புக்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதனை பஸ் தரிப்பு நிலையம், பொது விளையாட்டு மைதானம் போன்ற பொது வெளிகளில் ஒலிக்க செய்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளும் வகையில் தங்களது ஆன்மீக இசைத் தெரிவுகளை எமது மின்னஞ்சல்

பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் Read More »

வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினுடைய 102வது வருட பொங்கல் விழாவுடன் இணைந்து நடாத்திய வடமாகாண தைப்பொங்கல் விழா 16.01.2022 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் பிரதிநிதியான அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.சி.சுரேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் யாழ். இந்திய பதில் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராம்

வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022 Read More »

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் நிகழ்வானது இன்று (03.01.2022) காலை 9.00 மணிக்கு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வளாகத்தில் அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம் ஆகியனவற்றின் அனைத்து ஊழியர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைத்து உத்தியோகத்தர்கள் முன்னிலையில் செயலாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாகாணக்

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் Read More »

ஒளி விழா -2021

ஒளி விழா -2021 நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கல்வி அமைச்சு முன்றலில் 27.12.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிறிஸ்தவ குருமார்கள் கலந்து ஆசியுரை வழங்கினார்கள். கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர். நாவாந்துறை மறைப் பாடசாலை மாணவர்களினால் கரோல் கீதம்

ஒளி விழா -2021 Read More »

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021

கலைஞர் விருது வழங்கும் நிகழ்வும் கந்தபுராண இறுவெட்டு வெளியீடும் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழாவும் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வும், கந்தபுராண படன ஒலிப்பேழை வெளியீடும் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் 18.12.2021 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021 Read More »