சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இடையிலான கலந்துரையாடல்
சங்கானை பிரதேச மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை 19.12.2024 அன்று வியாழக்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சங்கானை பிரதேச மருத்துவமனை நோயாளர்களின் நலன்கருதி கடந்த காலங்களில் இடம்பெற்ற அரச மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளை மீள இயக்குமாறு அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சங்கானை பிரதேச மருத்துவமனையை தரம் உயர்த்துமாறு அபிவிருத்திச் சங்கப் […]
