ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28.01.2025) இடம்பெற்றது. இதன்போது ஆரிசிய ஆலோசகர் சங்கத்தினரால் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டது. அதில், களப்பணியில் ஈடுபடும் அவர்களுக்கு பொருத்தமான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும், சம்பள மாற்றியமைப்பு மற்றும் சம்பள உயர்வு சரியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீண்டகாலம் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரிய ஆலோசகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும், காகிதாகி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் பிரிட்டனின் இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

செவ்வாய்க்கிழமை (28.01.2025) யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுநூலகத்தைப் பார்வையிட்ட பின்னர் அங்குள்ள கேட்போர்கூடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனும் இதன்போது உடனிருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு 28.01.2025        

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் பிரிட்டனின் இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர் திருமதி கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு Read More »

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும், ‘பச்சிலை’ மலர் வெளியீடும்

புத்தகப் பூச்சிகளாக இருப்பதால் எமது அறிவு விருத்தியடையாது. நாட்டு நடப்புக்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். பத்திரிகைகளைப் படிக்கவேண்டும். எமது பாடப்புத்தகங்களுக்கு மேலதிகமாக படிக்கும் ஒவ்வொரு விடயங்களும் எமது அறிவை விருத்தி செய்யும். இன்றைய இளைய சமூகத்தை அதனை நோக்கித் தள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும், ‘பச்சிலை’ மலர் வெளியீடும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வும், ‘பச்சிலை’ மலர் வெளியீடும் Read More »

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் -வடக்கு மாகாண ஆளுநர்

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், நியூஸிலாந்துத் தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை (28.01.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் -வடக்கு மாகாண ஆளுநர் Read More »

பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தல்

பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், ஒவ்வொரு அழகக நிலையத்தினருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு மாகாண அழகக சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (24.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண அழகக சங்கத்தினரால் பல்வேறு விடயங்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக ஒரு சில அழகக நிலையங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. நேர ஒழுங்கு மற்றும்

பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் மேற்கொள்ளும்போது உரிய ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தல் Read More »

15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர். அவர்களை வரவேற்பதுடன் இன்னமும் அதிகமான முதலீடுகள் எமது மாகாணத்தை நோக்கி வரவேண்டும். அதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை (24.01.2025) ஆரம்பமானது. ரில்கோ விடுதியில் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு

15ஆவது ஆண்டாகவும் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி Read More »

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (23.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியில் உருவான ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை வெளியீடு Read More »

நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம் – வட மாகாண ஆளுநர்

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டம் முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாலை (22.01.2025) இடம்பெற்றது. ‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், எதிர்வரும் 03.02.2025 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர், பாடசாலை மாணவர்கள், திணைக்களப் பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் துப்புரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம்

நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அப்பால் நகரை அதே நிலையில் பேணுவதே முக்கியம் – வட மாகாண ஆளுநர் Read More »

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் – வட மாகாண ஆளுநர்

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என மீளவும் தெரிவித்தார் வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை (22.01.2025) இடம்பெற்றது. பிரதம செயலாளர், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின்

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைப்பாடுகள் தொடர்பில் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தலைமையிலான வடக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நகர அபிவிருத்திக்கான மூத்த விசேட அதிகாரி போஹரம் ஷ தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர். வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கான

உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »