ஆளுநர்

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களமும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் சமூகப் பராமரிப்பு நிலையத் திறப்பு விழா 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அருகில் நடைபெற்றது. நிலையத்தின் பெயர் பலகையை ஆளுநர் திரை நீக்கம் செய்து […]

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் பிரிவுகளும் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைமை இன்னமும் காணப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பினரின் வேலி பின்நகர்த்தப்படாமையால் இவ்வாறான சூழல் நிலவுகின்றமை தொடர்பில் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன்

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். Read More »

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 27.02.2025 அன்று வியாழக்கிழமை கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். கைத்தொழில்பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைகளையும் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். நீர் விநியோகம் இன்மை மற்றும் முன்னறிவித்தல் இல்லாத மின்தடை காரணமாக பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம் சில தொழிற்சாலைகளின் இயந்திரங்களை இயக்குபவர்களை பழக்குவதற்கு இந்தியாவிலிருந்தே ஆட்களை வரவழைக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால் அதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதில் தாமதம் நிலவுவதாகவும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், அச்சுவேலி

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டைக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். Read More »

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதனை அனைத்துத்தரப்புக்களும் இணைந்து முன்கொண்டு செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கும், அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சால், வடக்கு மாகாணத்துக்குரிய ‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கொள்கை வரைவை முன்வைத்து அது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.02.2025 அன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களினதும் செயலாளர்கள் ஆகியோரும், இந்த

‘பால்நிலை கொள்கை ஆவணம்’ தொடர்பான கலந்துரையாடல் Read More »

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தகாரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (25.02.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன்,

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார்.

எங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது நாம் மனதார இறைவனை வேண்டினால் நிச்சயம் எங்களுக்குப் பலன் கிடைக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் ஏற்பாடு செய்த, மகிமை வாய்ந்த 12 ஜோதிலிங்க குலங்களில் முதன்மையானதாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஜோதிலிங்க வழிபாடு நேற்று திங்கட்கிழமை காலை (24.02.2025) யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார். ‘மற்றையவர்களுக்கு

யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார். Read More »

‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கௌதாரிமுனை கடற்கரையில் இடம்பெற்றது.

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில்  அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த

‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கௌதாரிமுனை கடற்கரையில் இடம்பெற்றது. Read More »

பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை

விவசாய இரசாயன வெற்றுப் போத்தல்கள் சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வும், வாகனப் பேரணியும் 24.02.2025 திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. Crop life நிறுவனம் மற்றும் விவசாய நிறுவனங்களின் அனுசரணையுடன் பிரதி விவசாய பணிப்பாளர் – யாழ்ப்பாணம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பதிவாளர் – பீடைகொல்லி கட்டுபாட்டு

பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எமது சமூகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் காலத்தின் தேவைகருதி அவர் ஆரம்பித்த தினக்குரல் பத்திரிகை சமாதான காலத்தில் யாழ்ப்பாண மண்ணிலிருந்தும் வெளிவரத் தொடங்கியது. பிராந்திய ஊடகங்களின் செல்வாக்கு மிகுந்த வடக்கு மண்ணிலிருந்து ஏற்கனவே வெளிவந்த பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மேலதிகமாக

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி Read More »